கிருஷ்ணகிரி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி - பீலாளம் கிராமத்தில், 300 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின், வருங்கால நகர் திறன் பூங்கா அமையவுள்ள இடத்தை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சென்னப்பள்ளி ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளையும், மருதாண்டப்பள்ளி சூளகிரி சிப்காட் வளாகத்தில் நவீன மின்வாகன பூங்கா அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முக்கியமாக சூளகிரி - பீலாளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் வருங்கால நகர் திரன் பூங்கா அமையவுள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை வழங்கினார்.
நாளை இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு...அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
Bharathiraja: The Director Who Gave Tamil Cinema Its Soil, Its Colour, and Its Soul
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
சத்யாவின் விடியல்
சாய்ஸ்ரீயின் கேக்கு.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
காமம் தேடும் கயவர்களே
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
{{comments.comment}}