தலைக்கு விலை வைத்த சாமியார்.. கருணாநிதி ஸ்டைலில்.. உதயநிதி நையாண்டி!

Sep 05, 2023,12:12 PM IST
சென்னை: தனது தலைக்கு உ.பி. சாமியார் விலை வைத்துப் பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தாத்தா கருணாநிதி ஸ்டைலில் நையாண்டியாக பதிலடி கொடுத்துள்ளார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. உதயநிதியின் பேச்சை நாடு முழுவதும் விவகாரமாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுபவர்களுக்கு 10 கோடி வழங்குவதாக அறிவித்ததோடு, உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை வாளால் கிழித்து தீயிட்டு எரித்தும் உள்ளார். 

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் சாமியாரின் பேச்சிற்கு  நக்கலாக பதிலடி கொடுக்கும் விதமாக, என் தலைக்கு எதுக்கு 10 கோடி. ஒரு சீப்பு தந்தால் நானே என் தலையை சீவிக் கொள்வேன் என்று பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் நான் தலைவர் கருணாநிதியின் வழியில் வந்தவன் நான். அவரது பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன் என்றும் பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி தொடர்ந்து தைரியமாகவும், வழக்குகள் வந்தால் சமாளிப்பேன் என்றும் பேசி வருவதால் அவருக்கு ஆதரவாக திமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்துக்களைக் குவித்து வருகின்றனர். மறுபக்கம் பாஜக உள்ளிட்ட  இந்து அமைப்புகள் உதயநிதிக்கு எதிராக பேசி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்