மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் லேட்டஸ்டாக ஒரு நடிகை உயிரிழந்துள்ளார். இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆவார்.
அந்த நடிகையின் பெயர் பொலினா மென்ஷிக். 40 வயதான இவர் டான்பாஸ் பிராந்தியத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக் கொண்டிருந்தார். ரஷ்ய ராணுவத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது. அப்போது உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொலினா பரிதாபமாக உயிரிழந்தார்.
டான்பாஸ் பிராந்தியமானது உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமானது. ஆனால் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் அது உள்ளது. இந்த நிலையில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவத்தினரை மகிழ்விப்பதற்காக ஒரு நடன, இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்தான் பொலினா கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த கலாச்சார மையத்தைக் குறி வைத்து உக்ரைன் தனது ஹிமார்ஸ் ரக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் பொலினா உள்பட 25 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்தபோது பொலினா கிதாருடன் மேடையில் பாடிக் கொண்டிருந்தாராம்.
இந்த சம்பவம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள போர்ட்டல் ஸ்டுடியோ நாடக மையம் இரங்கல் தெரிவித்துள்ளது. இங்குதான் முன்பு பொலினா பணியாற்றியுள்ளார். பொலினா முன்பு இயக்கி நடித்த நாடகம் ஒன்றை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப் போவதாகவும் இந்த மையம் அறிவித்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}