மாஸ்கோவில் டிரோன் மூலம் தாக்குதல்.. உக்ரைன் அதிரடி.. ஏர்போர்ட்டை மூடிய ரஷ்யா

Jul 30, 2023,01:07 PM IST
மாஸ்கோ: உக்ரைன் ராணுவம் அனுப்பிய 3 டிரோன்கள், மாஸ்கோவுக்குள் ஊடுறுவியதால் பரபரப்பு ஏற்பட்டது அந்த டிரோன்களை ரஷ்யப் படையினர் தாக்கி முறியடித்து விட்ட போதிலும் கூட பதட்டம் தொடர்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை ரஷ்யா மூடி விட்டது.

ஒரு டிரோனை வானிலேயே வைத்து தாக்கி தகர்த்து விட்டது ரஷ்யா. மற்ற இரண்டு டிரோன்களையும் ரஷ்ய படையினர் வானிலேயே செயலிழக்க வைத்தனர். அவை அரசு அலுவலகம் ஒன்றின் மீது பறந்து வந்தபோது செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.



உக்ரைன்  ரஷ்யா எல்லையிலிருந்து மாஸ்கோ நகரமானது 500 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. ஆனால் அவ்வப்போது உக்ரைன் படையினர் மாஸ்கோவையும் குறி வைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் சமீப காலமாக டிரோன் தாக்குதல் முயற்சிகள் அதிகரித்து விட்டன.

புதிய டிரோன் தாக்குதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை மூட பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. மாஸ்கோ வந்த விமானங்கள் அக்கம் பக்கத்து விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்