மாஸ்கோவில் டிரோன் மூலம் தாக்குதல்.. உக்ரைன் அதிரடி.. ஏர்போர்ட்டை மூடிய ரஷ்யா

Jul 30, 2023,01:07 PM IST
மாஸ்கோ: உக்ரைன் ராணுவம் அனுப்பிய 3 டிரோன்கள், மாஸ்கோவுக்குள் ஊடுறுவியதால் பரபரப்பு ஏற்பட்டது அந்த டிரோன்களை ரஷ்யப் படையினர் தாக்கி முறியடித்து விட்ட போதிலும் கூட பதட்டம் தொடர்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை ரஷ்யா மூடி விட்டது.

ஒரு டிரோனை வானிலேயே வைத்து தாக்கி தகர்த்து விட்டது ரஷ்யா. மற்ற இரண்டு டிரோன்களையும் ரஷ்ய படையினர் வானிலேயே செயலிழக்க வைத்தனர். அவை அரசு அலுவலகம் ஒன்றின் மீது பறந்து வந்தபோது செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.



உக்ரைன்  ரஷ்யா எல்லையிலிருந்து மாஸ்கோ நகரமானது 500 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. ஆனால் அவ்வப்போது உக்ரைன் படையினர் மாஸ்கோவையும் குறி வைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் சமீப காலமாக டிரோன் தாக்குதல் முயற்சிகள் அதிகரித்து விட்டன.

புதிய டிரோன் தாக்குதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை மூட பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. மாஸ்கோ வந்த விமானங்கள் அக்கம் பக்கத்து விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்