டில்லி : மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல புதிய வருமான வரி திருத்தங்கள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் வருமான வரியில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே 5 சதவீதம் வருமான வரி என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் இனி ரூ.3 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாலே 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி விகிதங்கள் :
வருட வருமானம் ரூ. 3 லட்சம் வரை - வரி இல்லை
ரூ. 3 முதல் 7 லட்சம் - 5%
ரூ. 7 முதல் 10 லட்சம் - 10%
ரூ. 10 முதல் ரூ. 12 லட்சம் - 15%
ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம் - 20%
ரூ. 15 லட்சத்திற்கு மேல் - 30%
புதிய வருமான வரி வரம்பினால் மாத சம்பளதாரர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நான்கு கோடி சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இதனால் பயடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Standard deduction அதாவது நிரந்தர வருமான வரிக் கழிவு ரூ.50,000 ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}