டெல்லி: பணிபுரியும் பெண்களுக்கு நாடுமுழுவதும் விடுதிகள் தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களின் மேம்பாட்டு வளர்ச்சி சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு 2024-25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டை 1 மணி நேரம் 24 நிமிடங்கள் வாசித்து முடித்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு சில முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
* பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மேலும் அவர்களின் குழந்தைகளுக்காக கிரச் வசதியும் ஏற்படுத்தப்படும். நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவை அமைக்கப்படும்.
* மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்வி கடனாக 10 லட்சம் தரப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய வழிகள் ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்களின் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}