சென்னை: பொதுத்துறை வங்கிகளில் பங்குகளில் குறிப்பிட்ட சதவீத அளவை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நடவடிக்கையால், வங்கிகளின் செயல்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வரும் காலத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார்த் துறையின் பங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 6 வங்கிகளில் தற்போது 80 சதவீதத்திற்க்கும் மேலான பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. இதில், 5 முதல் 10 சதவீத பங்குகளை மட்டும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும், பங்குகளை விற்பதன் மூலம், அரசு நிதி ஆதாரத்தை ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிராக பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும், தனியாரிடம் அது போவது ஆபத்தானது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}