சென்னை: பொதுத்துறை வங்கிகளில் பங்குகளில் குறிப்பிட்ட சதவீத அளவை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நடவடிக்கையால், வங்கிகளின் செயல்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வரும் காலத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார்த் துறையின் பங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 6 வங்கிகளில் தற்போது 80 சதவீதத்திற்க்கும் மேலான பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. இதில், 5 முதல் 10 சதவீத பங்குகளை மட்டும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும், பங்குகளை விற்பதன் மூலம், அரசு நிதி ஆதாரத்தை ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிராக பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும், தனியாரிடம் அது போவது ஆபத்தானது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}