சென்னை: பொதுத்துறை வங்கிகளில் பங்குகளில் குறிப்பிட்ட சதவீத அளவை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நடவடிக்கையால், வங்கிகளின் செயல்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வரும் காலத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார்த் துறையின் பங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 6 வங்கிகளில் தற்போது 80 சதவீதத்திற்க்கும் மேலான பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. இதில், 5 முதல் 10 சதவீத பங்குகளை மட்டும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும், பங்குகளை விற்பதன் மூலம், அரசு நிதி ஆதாரத்தை ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிராக பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும், தனியாரிடம் அது போவது ஆபத்தானது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}