சென்னை: பொதுத்துறை வங்கிகளில் பங்குகளில் குறிப்பிட்ட சதவீத அளவை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நடவடிக்கையால், வங்கிகளின் செயல்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வரும் காலத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார்த் துறையின் பங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 6 வங்கிகளில் தற்போது 80 சதவீதத்திற்க்கும் மேலான பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. இதில், 5 முதல் 10 சதவீத பங்குகளை மட்டும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும், பங்குகளை விற்பதன் மூலம், அரசு நிதி ஆதாரத்தை ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிராக பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும், தனியாரிடம் அது போவது ஆபத்தானது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தொடக்கம்!
{{comments.comment}}