காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின்‌ உடலுக்கு.. மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!

Apr 23, 2025,06:35 PM IST

டெல்லி: பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.



ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஸ்ரீ நகரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. லால் சௌக் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்த தாக்குதலில் முதற்கட்டமாக, ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் மஞ்சுநாத் (கர்நாடகா), வினய் நர்வல் (ஹரியானா), சுபம் திவேதி(உ.பி), சந்திப் (நேபாளம்),  உத்வானி பிரதீப் (அமீரகம்), அதுல் ஸ்ரீகாந்த் (மராட்டியம்), சையது உசேன் (காஷ்மீர்), ஹிமத் (சூரத்), ராணுவ அதிகாரி சிவம் மோகா (கர்நாடகா) சஞ்சய், பிரசாத் குமார், மணீஸ் ரஞ்சன், பிடன் அதிகேரி, ராமச்சந்திரம், ஷாலி சந்தர், திலீப் ஜெயராமன் ஆகிய 16 பேர் உயிரிழந்தனர்.




அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த  மருத்துவர் பரமேஸ்வரன் ( 31) சென்னை, சந்துரு(83), பாலச்சந்திரா(57) ஆகிய மூன்று பேர் காயமடைந்து அனந்த்னாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் உடல்கள்  ஸ்ரீ நகரில் வைக்கப்பட்டது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.



இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்.முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்