கெளதமிக்கு ராஜபாளையம் சீட்டைத் தராததற்கு இதுதான் காரணம்.. எல். முருகன் விளக்கம்

Oct 23, 2023,11:04 AM IST

சென்னை: நடிகை கெளதமி பாஜகவுக்காக உழைத்துள்ளார். அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளது வருத்தம் அளிக்கிறது. அவர் கூறியுள்ள புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.


கெளதமிக்கு ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியைக் கொடுக்காததற்கு என்ன காரணம் என்பதையும் எல். முருகன் விளக்கியுள்ளார்.


பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகை கெளதமி திடீரென அக்கட்சியை விட்டு விலகியுள்ளார். அக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் சி. அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துக்களை மோசடியாக தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டதாக கெளதமி புகார் கூறியுள்ளார். இந்த மோசடி நபருக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பலர் இருப்பதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.




இது தனக்கு  பெரும் வலியைக் கொடுத்துள்ளதாகவும், வேதனையுடன் கட்சியை விட்டு விலகுவதாகவும் கெளதமி கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெளதமி கொடுத்த புகாரை தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் உள்பட 6 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.


இந்த நிலையில் கெளதமி விலகல் குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  நடிகை கெளதமி என்ன காரணத்துக்காக விலகியுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்துள்ளார். அவரது பணிகள் அனைத்துமே பாராட்டுக்குரியவையாகும். அவர் என்ன காரணம் கூறியிருந்தாலும் அதுகுறித்து விசாரிக்கப்படும்.


ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியை அவர் கேட்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் கூட்டணிக் கட்சி சார்பில் அது கேட்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அதை விட்டுக் கொடுக்க நேரிட்டது. இதனால்தான் கெளதமிக்கு சீட் தர முடியாமல் போனது என்றார் எல். முருகன்.


கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் எல். முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்