டெல்லி: கொரோனா தொற்று தற்போது அதிகமாக பரவி வரும் நிலையில், முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இ்ணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி போன்ற வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் 257 தொற்று இருந்த நிலையில் தற்போது 1009 ஆகி உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இ்ணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சர்வதேச யோகா தின விழா ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதன் 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த விழாவினை மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை அமையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் , துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலைச்சர் ரங்கசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அதன்பின்னர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், உலக அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு மிகப்பெரிய பங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேசுகையில், கொரோனா பரவல் தடுப்பிற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் முக கவசம் கட்டாயமில்லை. கொரோனா தொற்றை பொருத்து அந்தந்த மாநிலங்களும் அவர்களது மாநிலத்திற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}