பாரிஸ்: வினேஷ் போகத் விவகாரம் குறித்து உலக மல்யுத்த சம்மேளன தலைவர் நேனாட் லாலோவிக் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். நடந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், நாங்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதே என்றும் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதைப் பார்த்தால் வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
வினேஷ் போகத் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று ஒலிம்பிக் மறு பரிசீலனை தீர்ப்பாயத்திடம் முறையிட்டுள்ளார். ஒலிம்பிக் நிறைவு நாளன்று தீர்ப்பு வழங்குவதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. அதாவது 13ம் தேதிதான் தீர்ப்பு வெளியாகும். இந்திய நேரப்படி அன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பாயம் தனது தீர்ப்பை அளிக்கவுள்ளது.

இந்த நிலையில் என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் உலக மல்யுத்த சம்மேளன தலைவர் நேனாட் லாலோவிக் பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள இமெயிலில் கூறியிருப்பதாவது:
நடந்த சம்பவத்திற்காக நான் வருத்தப்படுகிறேன். வினேஷ் போகத்துக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் விதிமுறைகளை நாம் புறக்கணிக்க முடியாது. நாங்கள் இதில் நாடுகளைப் பார்ப்பதில்லை. வீரர்களாக மட்டுமே பார்க்கிறோம். அங்கு விளையாட்டை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம்.
எடை சரிபார்ப்பு என்பது பொதுவெளியில் நடப்பது. அனைவருக்குமே தெரியும் அங்கு என்ன நடந்தது என்று. அதில் எந்த ரகசியமும் இல்லை. விதிகளுக்கு மாறாக எடை இருக்கும்போது எப்படி போட்டியிட அனுமதிக்க முடியும். நாங்கள் விதிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டுமே.
வீரர்கள், வீராங்கனைகளின் நலனுக்காகவே இந்த எடை விதிமுறை கொண்டு வரப்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விதிமுறைக்கு உடன்பட்டாக வேண்டும். விதிமுறைகளில் சில சில மாற்றங்களைச் செய்யலாமே தவிர முழுமையாக அதை ரத்து செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
அவர் கூறுவதைப் பார்த்தால் வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்த ஒரே காரணத்திற்காக பல்வேறு சாதனைகளுடன் வெற்றியை நோக்கி விரைந்து கொண்டிருந்த வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக் தீர்ப்பாயம் கருணை காட்டுமா என்ற எதிர்பார்ப்பில் இந்தியர்கள் காத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}