லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், லாரியுடன் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். அதில் ஒரு குழந்தையும் அடக்கம் என்பது துயரமானது.
பரேலி என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. காரில் சென்ட்ரல் லாக் போடப்பட்டிருந்ததால் காரைத் திறக்க முடியாமல் அதில் இருந்த 8 பேரும் சிக்கிக் கொண்டு, உயிருடன் கருகி விட்டார்கள்.

இந்தக் கார் நைனிடால் செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி மறு திசையில் போய் விழுந்தது. அங்கு வந்து கொண்டிருந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்துக் கொண்டது. காரில் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போய் விட்டது.
காரில் சென்ட்ரல் லாக் போடப்பட்டிருந்ததால் காரில் இருந்தவர்களால் அதைத் திறக்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே காருக்குள் இருந்த எட்டு பேரும் பரிதாபமாக உயிரோடு கருகிப் பிணமானார்கள்.
காரில் இருந்தவர்கள் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவி்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}