லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், லாரியுடன் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். அதில் ஒரு குழந்தையும் அடக்கம் என்பது துயரமானது.
பரேலி என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. காரில் சென்ட்ரல் லாக் போடப்பட்டிருந்ததால் காரைத் திறக்க முடியாமல் அதில் இருந்த 8 பேரும் சிக்கிக் கொண்டு, உயிருடன் கருகி விட்டார்கள்.

இந்தக் கார் நைனிடால் செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி மறு திசையில் போய் விழுந்தது. அங்கு வந்து கொண்டிருந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்துக் கொண்டது. காரில் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போய் விட்டது.
காரில் சென்ட்ரல் லாக் போடப்பட்டிருந்ததால் காரில் இருந்தவர்களால் அதைத் திறக்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே காருக்குள் இருந்த எட்டு பேரும் பரிதாபமாக உயிரோடு கருகிப் பிணமானார்கள்.
காரில் இருந்தவர்கள் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவி்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}