லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், லாரியுடன் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். அதில் ஒரு குழந்தையும் அடக்கம் என்பது துயரமானது.
பரேலி என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. காரில் சென்ட்ரல் லாக் போடப்பட்டிருந்ததால் காரைத் திறக்க முடியாமல் அதில் இருந்த 8 பேரும் சிக்கிக் கொண்டு, உயிருடன் கருகி விட்டார்கள்.
இந்தக் கார் நைனிடால் செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி மறு திசையில் போய் விழுந்தது. அங்கு வந்து கொண்டிருந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்துக் கொண்டது. காரில் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போய் விட்டது.
காரில் சென்ட்ரல் லாக் போடப்பட்டிருந்ததால் காரில் இருந்தவர்களால் அதைத் திறக்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே காருக்குள் இருந்த எட்டு பேரும் பரிதாபமாக உயிரோடு கருகிப் பிணமானார்கள்.
காரில் இருந்தவர்கள் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவி்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}