மிச்சிகன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது 2வது மாடி ஜன்னல் வழியாக, கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலிருந்து குதித்த கர்ப்பிணிக்கு பலத்த அடி பட்டபோதிலும் கூட அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிர்ஷ்டம் என்பது அனைவருக்கும் நடந்து விடக்கூடிய சாதாரண விஷயம் என்பது கிடையாது. அதிர்ஷ்டம் என்பதே முதலில் அதிசயமானது. திடீரென நிகழக் கூடியது. நிகழும்போது அது கொடுக்கும் பலன்களும், சந்தோஷமும், சர்ப்பிரைஸும், விலை மதிக்க முடியாததாக இருக்கும்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இப்படித்தான் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் அந்தப் பெண்ணுக்கே கூட இதை பெரிய சர்ப்பிரைஸ்தான். அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி ரேச்சல் ஸ்டேன்ட்பாஸ்ட் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகளைக் கொண்டதாகும். அந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ரேச்சல் என்ன செய்வதென்று அறியாமல் தன் வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்காக 2வது மாடியிலிருந்து கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலிருந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார்.
இதனால்அவருக்கு பின் தலையில் அடிபட்டது. உடம்பிலும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக அவருக்கு சிசேரியன் செய்யப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்தனர். அவர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஒரு கர்ப்பிணியாக இல்லாமல் சாதாரண பெண்ணாக இருந்து குதித்து இருந்தாலும் உயிர் பிழைப்பது என்பது கஷ்டம். ஆனால் இந்தப் பெண்மணி உயிர் தப்பித்தது மட்டுமல்லாமல் குழந்தையையும் நலமாக பெற்றெடுத்துள்ளார். இது அனைவரையும் மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தனது குழந்தைக்கு ப்ரைனெல் ரோஸ் என பெயர் சூட்டி உள்ளார் ரேச்சல்..தாயும், சேயும் சூப்பர் நலமாக உள்ளனராம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}