Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்

Jun 24, 2025,05:02 PM IST

வாஷிங்டன்: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஈரான் மீது குண்டு வீச வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.


உங்களது விமானங்களில் பொருத்தியுள்ள குண்டுகளைப் போடாதீர்கள். பைலட்டுகளைத் திரும்பச் சொல்லுங்கள் என்றும் இஸ்ரேலுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 




ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போருக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திய சில மணிநேரங்களிலேயே, ஈரான் மேலும் ஒரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


"இஸ்ரேல். அந்தக் குண்டுகளைப் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அது ஒரு பெரிய போர் நிறுத்த மீறல். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு அழைத்து வாருங்கள்! - டொனால்ட் ஜே. டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்