Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்

Jun 24, 2025,05:02 PM IST

வாஷிங்டன்: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஈரான் மீது குண்டு வீச வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.


உங்களது விமானங்களில் பொருத்தியுள்ள குண்டுகளைப் போடாதீர்கள். பைலட்டுகளைத் திரும்பச் சொல்லுங்கள் என்றும் இஸ்ரேலுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 




ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போருக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திய சில மணிநேரங்களிலேயே, ஈரான் மேலும் ஒரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


"இஸ்ரேல். அந்தக் குண்டுகளைப் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அது ஒரு பெரிய போர் நிறுத்த மீறல். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு அழைத்து வாருங்கள்! - டொனால்ட் ஜே. டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்