வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் உடனடியாக மோதலைக் கைவிட ஒப்புக் கொண்டுள்ளன என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் இதுதொடர்பாக வெளியிட்ட ட்வீட்டைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே நிலவி வரும் போர்ப் பதட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியத் தரப்பிலோ அல்லது பாகிஸ்தான் தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக அதிபர் டிரம்ப் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலமாக நீண்ட இரவு நேர பேச்சுவார்ததை நடைபெற்றது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் முழு அளவிலும், உடனடியாகவும் தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டன. இரு நாடுகளின் தலைவர்களும் புத்திசாலித்தனமாகவும், பொது அறிவுடனும் நடந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது. இரு நாட்டுத் தலைவர்களையும் வாழ்த்துகிறேன் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது மார்கோ ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், கடந்த 48 மணி நேரத்தில் நானும், துணை அதிபர் டி வான்ஸும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினோம். இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், இரு நாட்டுத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களான அஜீத் தோவல், ஆசிம் மாலிக் ஆகியோரும் அடங்குவர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக இரு நாடுகளும் உடனடியாக தாக்குதலை நிறுத்தவும், பிரச்சினைகளின் அடிப்படையில் நடுநிலையான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளன. அமைதிப் பாதையை தேர்வு செய்ய முன்வந்த இரு நாட்டு பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஷெரீப் ஆகிய இருவரின் புத்திசாலித்தனம், தலைமைத்துவப் பண்பை அமெரிக்கா பாராட்டுகிறது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இரு நாடுகளும் எங்கு வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போகின்றன என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக அமெரிக்காவிலேயே வைத்துக் கூட பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}