நீயா நானா?... அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் - டொனால்ட் டிரம்ப் மோதல்

Mar 13, 2024,05:50 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் மோதவுள்ளார். அதேபோல குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு இரு தலைவர்களும் மீண்டும் அதிபர் தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.


ஜோ பிடன் மற்றும் டிரம்ப் ஆகியோருக்கு புதன்கிழமை அவரவர் கட்சிக்கான வேட்பாளர் நாமினேஷன் உறுதியானதைத் தொடர்ந்து, இருவரும் மோதுவது இறுதியாகி விட்டது.  இந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.


மிஸ்ஸிஸிப்பி, வாஷிங்டன், ஜார்ஜியா மாகாணங்களில் நடந்த வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் இருவருக்கும் தேவையான வாக்குகள் கிடைத்ததைத் தொடர்ந்து இருவரும் வேட்பாளர்களாக  உருவெடுத்தனர்.




அமெரிக்காவைப் பொறுத்தவரை இரு கட்சி முறை நிலவுகிறது. ஒன்று ஜனநாயகக் கட்சி, இன்னொன்று குடியரசுக் கட்சி. இவர்கள் தவிர சுயேச்சையாக சிலர் போட்டியிடுவார்கள். சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் தனி நபர்களாகவே இருப்பார்கள். கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்றால் அந்தக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்க வேண்டும். யாருக்கு அதிக ஆதரவு கிடைக்கிறதோ அவரே வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்.


மீண்டும் அதிபர் தேர்தலில் மோதப் போகும் ஜோ பிடனுக்கு தற்போது 81 வயதாகிறது. முன்னாள் அதிபரான டிரம்ப்புக்கு 77 வயதாகிறது. டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆனாலும் அவர் மீண்டும் அதிபராவதற்கு தீவிரமாக ஆர்வம் காட்டி வந்தார். தற்போது போட்டிக் களத்தில் பிடனுடன் மீண்டும் நேருக்கு நேர் நிற்கப் போகிறார்.


ஆசியர்களுக்கு ஏமாற்றம்:


இந்த அதிபர் தேர்தலில் ஆசிய பூர்வீகத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. காரணம், குடியரசுக் கட்சி சார்பில் விவேக் ராமசாமியும், நிக்கி ஹாலேவும் போட்டிக் களத்தில் இருந்தனர். இருவரும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ஆவர். இவர்களில் விவேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திடீரென அவர் ஜகா வாங்கி விட்டார்.. அவரைத் தொடர்ந்து நிக்கியும் விலகவே, இந்திய வம்சாவளியினர் ஏமாற்றமடைந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்