கல்யாணத்துக்கு இன்னும் 3 மாசம்தான் இருக்கு.. 11 வயசு சிறுவனுடன்.. 24 வயது டீச்சர் அதிரடி கைது!

May 05, 2024,08:29 AM IST

விஸ்கான்சின்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக் கூட ஆசிரியை ஒருவர் சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.  அந்த டீச்சருக்கு வயது 24, சிறுவனின் வயது 11 ஆகும்.


இவருக்கு இன்னும் 3 மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ளது. இப்படி திருமணத்தை வைத்துக் கொண்டு இந்த சேட்டையில் அந்த டீச்சர் ஈடுபட்டுள்ளார் என்பதான் அதிர்ச்சிகரமானது. விஸ்கான்சின் மாகாணத்தின் செயின்ட் பால் நகரில் இவர் வசித்து வருகிறார். அவரது பெயர் மேடிசன் பெர்க்மான்.  அமெரிக்க சட்டப்படி 13 வயதுக்குட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டவிரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் ஹட்சன் பகுதியில் உள்ள ரிவர் கிரஸ்ட் தொடக்கப் பள்ளியில் டீச்சராக இருந்து வந்தார். அப்போது 5வது கிரேட் படிக்கும் சம்பந்தப்பட்ட மாணவரை தனது ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் மொபைல் போனில் ஆபாச பேச்சுக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இந்த டீச்சர்தான் முதலில் இதையெல்லாம் தொடங்கியுள்ளார். இந்த மொபைல் போன் மெசேஜ்களை சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளிக் கூடத்தில் புகார் செய்தனர். பின்னர் பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் கொடுத்தது. இதைத் தொடர்ந்து டீச்சர் கைது செய்யப்பட்டார்.




விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பள்ளி நேரத்தின்போது லன்ச் டைமிலும், பள்ளி முடிந்த பின்னரும் சிறுவனை தனது  இச்சைக்குப் பலியாக்கியுள்ளார் இந்த டீச்சர்.  பள்ளிக் கூடத்திலும், தனது வீட்டிலுமாக இதைத் தொடர்ந்துள்ளார். எப்படியெல்லாம் சிறுவனுடன் உறவில் ஈடுபட்டார் என்பதை அவர் டயரி போல எழுதி வைத்தும் உள்ளார். அதையெல்லாம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 


வருகிற ஜூலை மாதம்  இவருக்குத் திருமணம் நடைபெறவுள்து. தனது நீண்ட கால காதலைத் திருமணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் அவர் சிறுவனுடன் உறவு வைத்து சிக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட டீச்சர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்