ஒரிகான்: அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில், ரயில் நிலைய பிளாட்பார்மில் நின்றிருந்த 3 வயது சிறுமியை ஒரு பெண் தண்டவாளத்தில் தள்ளி விட்டதால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் டிசம்பர் 28ம் தேதி நடந்துள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரிகானில் உள்ள ரயில்வே நிலையத்தில் பயணிகள் பலர் ரயிலுக்காக காத்திருந்தனர். அதில் இந்த 3 வயது சிறுமியும் அடக்கம். சிறுமி, நின்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண், வேகமாக எழுந்து வந்து சிறுமியை பிடித்து தண்டவாளத்தில் தள்ளி விட்டு விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த அசம்பாவிதத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து குழந்தையைத் தூக்கி காப்பாற்றி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அப்போது ரயில் வரவில்லை.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரது பெயர் பிரையானா லேஸ் ஒர்க்மேன், 32 வயதாகிறது. ஏன் இவர் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மல்டினோமா கோர்ட்டில் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தப் பெண்ணுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}