ஒரிகான்: அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில், ரயில் நிலைய பிளாட்பார்மில் நின்றிருந்த 3 வயது சிறுமியை ஒரு பெண் தண்டவாளத்தில் தள்ளி விட்டதால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் டிசம்பர் 28ம் தேதி நடந்துள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரிகானில் உள்ள ரயில்வே நிலையத்தில் பயணிகள் பலர் ரயிலுக்காக காத்திருந்தனர். அதில் இந்த 3 வயது சிறுமியும் அடக்கம். சிறுமி, நின்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண், வேகமாக எழுந்து வந்து சிறுமியை பிடித்து தண்டவாளத்தில் தள்ளி விட்டு விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த அசம்பாவிதத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து குழந்தையைத் தூக்கி காப்பாற்றி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அப்போது ரயில் வரவில்லை.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரது பெயர் பிரையானா லேஸ் ஒர்க்மேன், 32 வயதாகிறது. ஏன் இவர் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மல்டினோமா கோர்ட்டில் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தப் பெண்ணுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}