ஒரிகான்: அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில், ரயில் நிலைய பிளாட்பார்மில் நின்றிருந்த 3 வயது சிறுமியை ஒரு பெண் தண்டவாளத்தில் தள்ளி விட்டதால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் டிசம்பர் 28ம் தேதி நடந்துள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரிகானில் உள்ள ரயில்வே நிலையத்தில் பயணிகள் பலர் ரயிலுக்காக காத்திருந்தனர். அதில் இந்த 3 வயது சிறுமியும் அடக்கம். சிறுமி, நின்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண், வேகமாக எழுந்து வந்து சிறுமியை பிடித்து தண்டவாளத்தில் தள்ளி விட்டு விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த அசம்பாவிதத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து குழந்தையைத் தூக்கி காப்பாற்றி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அப்போது ரயில் வரவில்லை.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரது பெயர் பிரையானா லேஸ் ஒர்க்மேன், 32 வயதாகிறது. ஏன் இவர் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மல்டினோமா கோர்ட்டில் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தப் பெண்ணுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}