V Sankar poem: நடிப்பதே வாழ்க்கை !

Apr 27, 2026,01:41 PM IST

- வெ.சங்கர்


மானுட வாழ்வின் 

மகத்தானக் கலை 


மனதில் நிற்குமே

 மகிழ்ச்சியான சோலை 


நடிப்பு என்பதே 

 ஈர்க்கும் வலை 


நாடகமே தமிழ்தாயின்

 மூன்றாம் பேரலை 


கவலையை தீர்க்கும்

 கருத்தானச் சுலை


கலையை விரும்பாத

 உள்ளமும் இல்லை 




தொண்டுதொட்டு பேணிவந்த

தொன்மையான நாடகக்கலை 


தொடருது வறுமைக்குள்

 கலைஞனின் நிலை 


இரவினில் அரசனாய்

 அரியணையில் இருப்பான் 


பகலினில் பசிக்குள்

 கேட்பாரற்றுக் கிடப்பான் 


வருமானம் இன்றியே 

 வாழ்வினைத் தொலைப்பான் 


வாழும் காலத்தைக்

 கலைக்காய் இழப்பான் 


சிரிக்கவும் வைப்பான்

 சிந்திக்கவும் செய்வான் 


செல்லாக் காசாய்

 சிதலமடைந்து போவான் 


நிசத்தில் நடிக்கத்தான்

 தெரியாத நடிகன் 


நாடகத்தில் என்றுமே 

அவன் சகலகலாவல்லவன் 


கலைகளின் இளவரசி

 நாடகக் கலையே 


கல்நெஞ்சமும் இளகிடும்

 உந்தன் வலையிலே 


போற்றிக் காத்திடுவோம்

 பொறுப்பான மனிதராய் 


மக்களுக்கான கலையாய்

 தொடுப்போம் ஆயுதமாய் 


(கவிஞர் வெ. சங்கர், கிருஷ்ணகிரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்