V Sankar poem: நடிப்பதே வாழ்க்கை !

Apr 27, 2026,01:41 PM IST

- வெ.சங்கர்


மானுட வாழ்வின் 

மகத்தானக் கலை 


மனதில் நிற்குமே

 மகிழ்ச்சியான சோலை 


நடிப்பு என்பதே 

 ஈர்க்கும் வலை 


நாடகமே தமிழ்தாயின்

 மூன்றாம் பேரலை 


கவலையை தீர்க்கும்

 கருத்தானச் சுலை


கலையை விரும்பாத

 உள்ளமும் இல்லை 




தொண்டுதொட்டு பேணிவந்த

தொன்மையான நாடகக்கலை 


தொடருது வறுமைக்குள்

 கலைஞனின் நிலை 


இரவினில் அரசனாய்

 அரியணையில் இருப்பான் 


பகலினில் பசிக்குள்

 கேட்பாரற்றுக் கிடப்பான் 


வருமானம் இன்றியே 

 வாழ்வினைத் தொலைப்பான் 


வாழும் காலத்தைக்

 கலைக்காய் இழப்பான் 


சிரிக்கவும் வைப்பான்

 சிந்திக்கவும் செய்வான் 


செல்லாக் காசாய்

 சிதலமடைந்து போவான் 


நிசத்தில் நடிக்கத்தான்

 தெரியாத நடிகன் 


நாடகத்தில் என்றுமே 

அவன் சகலகலாவல்லவன் 


கலைகளின் இளவரசி

 நாடகக் கலையே 


கல்நெஞ்சமும் இளகிடும்

 உந்தன் வலையிலே 


போற்றிக் காத்திடுவோம்

 பொறுப்பான மனிதராய் 


மக்களுக்கான கலையாய்

 தொடுப்போம் ஆயுதமாய் 


(கவிஞர் வெ. சங்கர், கிருஷ்ணகிரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்