- வெ.சங்கர்
மானுட வாழ்வின்
மகத்தானக் கலை
மனதில் நிற்குமே
மகிழ்ச்சியான சோலை
நடிப்பு என்பதே
ஈர்க்கும் வலை
நாடகமே தமிழ்தாயின்
மூன்றாம் பேரலை
கவலையை தீர்க்கும்
கருத்தானச் சுலை
கலையை விரும்பாத
உள்ளமும் இல்லை

தொண்டுதொட்டு பேணிவந்த
தொன்மையான நாடகக்கலை
தொடருது வறுமைக்குள்
கலைஞனின் நிலை
இரவினில் அரசனாய்
அரியணையில் இருப்பான்
பகலினில் பசிக்குள்
கேட்பாரற்றுக் கிடப்பான்
வருமானம் இன்றியே
வாழ்வினைத் தொலைப்பான்
வாழும் காலத்தைக்
கலைக்காய் இழப்பான்
சிரிக்கவும் வைப்பான்
சிந்திக்கவும் செய்வான்
செல்லாக் காசாய்
சிதலமடைந்து போவான்
நிசத்தில் நடிக்கத்தான்
தெரியாத நடிகன்
நாடகத்தில் என்றுமே
அவன் சகலகலாவல்லவன்
கலைகளின் இளவரசி
நாடகக் கலையே
கல்நெஞ்சமும் இளகிடும்
உந்தன் வலையிலே
மக்களுக்கான கலையாய்
தொடுப்போம் ஆயுதமாய்
(கவிஞர் வெ. சங்கர், கிருஷ்ணகிரி)
படிப்போம்.. பண்படுவோம்.. பயனுற வாழ்ந்திடுவோம்!
காணாமல் போன விஷாலும் காவலர் பேச்சும்.. விஷாலின் விளையாட்டுகள் (13)
Madurai Meenakshi: மாணிக்க மூக்குத்தி.. மதுரை மீனாட்சிக்குக் கல்யாணம்!
பணிநிறைவு பாராட்டு விழா!
டெல்லியில் வெளுத்து வாங்கும் வெயில்: 'சில் பிளான்' வெளியிட்ட முதல்வர் ரேகா குப்தா
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு
தேர்தல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: உச்சம் தொட்ட விமானக் கட்டணம்
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
{{comments.comment}}