- ஸ்வர்ணலட்சுமி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாதம் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர தினத்தில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
பராபவ ஆண்டு 2026 மே மாதம் 21 வைகாசி ஏழாம் நாள் வியாழக்கிழமை புகழ்பெற்ற வசந்த திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. வைகாசி விசாகத் திருவிழா மே 30ஆம் தேதி சனிக்கிழமை,வைகாசி 16ஆம் நாள் கோலாகலமாக நடைபெற இருப்பதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இப்போது இருந்தே திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் நகர் முழுவதும் தற்போதே ஆன்மீகக் களை கட்டத் தொடங்கி உள்ளது.

திருவிழா நாட்களில் தினமும் பகல் பொழுதில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் சண்முக விலாச மண்டபத்திற்கு செல்வார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் மற்றும் தீபாராதனை நடைபெற்று, மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
மேலும் வைகாசி விசாக சிறப்புகள் பற்றி அடுத்த பதிவில் காண்போம். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை சேர்க்க மறுத்தார் இபிஎஸ்.. சி.வி.சண்முகம் காட்டம்
அதிமுக.,வில் திக்...திக்...இபிஎஸ்.,க்கு 80 பேர் ஆதரவு...அடுத்து என்ன நடக்கும்?
'கருப்பு' பட சர்ச்சை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்தது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’!
வைகாசி விசாகத் திருவிழா .. விமரிசையாக தயாராகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!
சிந்தனைச் சிதறல்.. இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கும்!
மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)
Things We Can Learn from CM Vijay.. முதல்வர் விஜய்யிடமிருந்து நாம் கத்துக்க வேண்டியவை!
Tamil Short Story: 10 ரூபாய்க்கு 13 லட்சம்!
{{comments.comment}}