திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

Jan 22, 2026,07:15 PM IST

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து மீது மர்ம நபர் ஒருவர் காலணியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையை முடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கியபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென தனது காலணியை அவர் நோக்கி வீசினார். 




அது வைரமுத்துவின் அருகில் விழுந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த நபரைப் பிடித்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்தச் சம்பவத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்