திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

Jan 22, 2026,07:15 PM IST

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து மீது மர்ம நபர் ஒருவர் காலணியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையை முடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கியபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென தனது காலணியை அவர் நோக்கி வீசினார். 




அது வைரமுத்துவின் அருகில் விழுந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த நபரைப் பிடித்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்தச் சம்பவத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்