வாழ்க்கை ஓவியத்தை.. தேடித் தொலைந்து.. பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்.. உன் பார்வையின்.. தீண்டலுக்காக

Feb 13, 2025,12:02 PM IST

- தேவி


உன் மெளனங்களை அணைத்துக் கொண்டு

பார்வைகளில் திளைத்துக் கொண்டு

உன் முச்சினை சுவாசித்து கொண்டு 

விரல் நுனியில் ஒளிந்து கொண்டு

உன் இதயத்தை உரசிக் கொண்டு 

உன் சிரிப்பினில் மூழ்கிக் கொண்டு 

கருவிழிகளில் நுழைந்து கொண்டு 

இதழ்களில் தேன் வார்த்தைகளை தூவி கொண்டு 

காதலின் மேகங்களை தழுவி கொண்டு


 


உயிரினை மாற்றிக் கொண்டு 

புது உலகினை தேடிக் கொண்டு 

காற்றினில் மிதந்து கொண்டு

காலத்தினை ரசித்துக் கொண்டு 

காதலின் ஓசையைக் கேட்டுக் கொண்டு 

மனதின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு 

மாற்றங்களை ஏற்றுக் கொண்டு 

மன ஓட்டத்தை படித்துக் கொண்டு 

மலரினை கையில் ஏந்தி கொண்டு 

மயக்கத்தினை பார்வையில் கடத்திக் கொண்டு 

வானவில்லின் பார்வையில் மிதந்து கொண்டு 

இமைகளின் இடையில் சிக்கிக் கொண்டு 

உன் தேடலில் தொலைந்து கொண்டு 

உன் அழகினில் மடிந்து கொண்டு  

வாழ்க்கையின் ஓவியத்தை

உன் பார்வையில் தேடி தொலைந்து 

பூத்து சிலிர்த்து நிற்கின்றேன் 

உன் பார்வையின் 

தீண்டலுக்காக....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்