வாழ்க்கை ஓவியத்தை.. தேடித் தொலைந்து.. பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்.. உன் பார்வையின்.. தீண்டலுக்காக

Feb 13, 2025,12:02 PM IST

- தேவி


உன் மெளனங்களை அணைத்துக் கொண்டு

பார்வைகளில் திளைத்துக் கொண்டு

உன் முச்சினை சுவாசித்து கொண்டு 

விரல் நுனியில் ஒளிந்து கொண்டு

உன் இதயத்தை உரசிக் கொண்டு 

உன் சிரிப்பினில் மூழ்கிக் கொண்டு 

கருவிழிகளில் நுழைந்து கொண்டு 

இதழ்களில் தேன் வார்த்தைகளை தூவி கொண்டு 

காதலின் மேகங்களை தழுவி கொண்டு


 


உயிரினை மாற்றிக் கொண்டு 

புது உலகினை தேடிக் கொண்டு 

காற்றினில் மிதந்து கொண்டு

காலத்தினை ரசித்துக் கொண்டு 

காதலின் ஓசையைக் கேட்டுக் கொண்டு 

மனதின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு 

மாற்றங்களை ஏற்றுக் கொண்டு 

மன ஓட்டத்தை படித்துக் கொண்டு 

மலரினை கையில் ஏந்தி கொண்டு 

மயக்கத்தினை பார்வையில் கடத்திக் கொண்டு 

வானவில்லின் பார்வையில் மிதந்து கொண்டு 

இமைகளின் இடையில் சிக்கிக் கொண்டு 

உன் தேடலில் தொலைந்து கொண்டு 

உன் அழகினில் மடிந்து கொண்டு  

வாழ்க்கையின் ஓவியத்தை

உன் பார்வையில் தேடி தொலைந்து 

பூத்து சிலிர்த்து நிற்கின்றேன் 

உன் பார்வையின் 

தீண்டலுக்காக....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசியலுக்கு வருகிறேன்.. ராகவா லாரன்ஸ் அறிவிப்பு.. தவெகவா.. அண்ணாமலையா?

news

விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!

news

அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!

news

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை

news

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை

news

எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்

news

என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?

news

நமது துன்பத்திற்கு நாமே காரணமா?

news

திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்