வாழ்க்கை ஓவியத்தை.. தேடித் தொலைந்து.. பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்.. உன் பார்வையின்.. தீண்டலுக்காக

Feb 13, 2025,12:02 PM IST

- தேவி


உன் மெளனங்களை அணைத்துக் கொண்டு

பார்வைகளில் திளைத்துக் கொண்டு

உன் முச்சினை சுவாசித்து கொண்டு 

விரல் நுனியில் ஒளிந்து கொண்டு

உன் இதயத்தை உரசிக் கொண்டு 

உன் சிரிப்பினில் மூழ்கிக் கொண்டு 

கருவிழிகளில் நுழைந்து கொண்டு 

இதழ்களில் தேன் வார்த்தைகளை தூவி கொண்டு 

காதலின் மேகங்களை தழுவி கொண்டு


 


உயிரினை மாற்றிக் கொண்டு 

புது உலகினை தேடிக் கொண்டு 

காற்றினில் மிதந்து கொண்டு

காலத்தினை ரசித்துக் கொண்டு 

காதலின் ஓசையைக் கேட்டுக் கொண்டு 

மனதின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு 

மாற்றங்களை ஏற்றுக் கொண்டு 

மன ஓட்டத்தை படித்துக் கொண்டு 

மலரினை கையில் ஏந்தி கொண்டு 

மயக்கத்தினை பார்வையில் கடத்திக் கொண்டு 

வானவில்லின் பார்வையில் மிதந்து கொண்டு 

இமைகளின் இடையில் சிக்கிக் கொண்டு 

உன் தேடலில் தொலைந்து கொண்டு 

உன் அழகினில் மடிந்து கொண்டு  

வாழ்க்கையின் ஓவியத்தை

உன் பார்வையில் தேடி தொலைந்து 

பூத்து சிலிர்த்து நிற்கின்றேன் 

உன் பார்வையின் 

தீண்டலுக்காக....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

UGC.. பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைக்க மத்திய அரசு முடிவு

news

பிரபல எழுத்தாளர், கவிஞர்.. ஈரோடு தமிழன்பன் காலமானார்

news

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி

news

அத்தே.. அத்தே...!

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!

news

சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்