வாழ்க்கை ஓவியத்தை.. தேடித் தொலைந்து.. பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்.. உன் பார்வையின்.. தீண்டலுக்காக

Feb 13, 2025,12:02 PM IST

- தேவி


உன் மெளனங்களை அணைத்துக் கொண்டு

பார்வைகளில் திளைத்துக் கொண்டு

உன் முச்சினை சுவாசித்து கொண்டு 

விரல் நுனியில் ஒளிந்து கொண்டு

உன் இதயத்தை உரசிக் கொண்டு 

உன் சிரிப்பினில் மூழ்கிக் கொண்டு 

கருவிழிகளில் நுழைந்து கொண்டு 

இதழ்களில் தேன் வார்த்தைகளை தூவி கொண்டு 

காதலின் மேகங்களை தழுவி கொண்டு


 


உயிரினை மாற்றிக் கொண்டு 

புது உலகினை தேடிக் கொண்டு 

காற்றினில் மிதந்து கொண்டு

காலத்தினை ரசித்துக் கொண்டு 

காதலின் ஓசையைக் கேட்டுக் கொண்டு 

மனதின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு 

மாற்றங்களை ஏற்றுக் கொண்டு 

மன ஓட்டத்தை படித்துக் கொண்டு 

மலரினை கையில் ஏந்தி கொண்டு 

மயக்கத்தினை பார்வையில் கடத்திக் கொண்டு 

வானவில்லின் பார்வையில் மிதந்து கொண்டு 

இமைகளின் இடையில் சிக்கிக் கொண்டு 

உன் தேடலில் தொலைந்து கொண்டு 

உன் அழகினில் மடிந்து கொண்டு  

வாழ்க்கையின் ஓவியத்தை

உன் பார்வையில் தேடி தொலைந்து 

பூத்து சிலிர்த்து நிற்கின்றேன் 

உன் பார்வையின் 

தீண்டலுக்காக....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்