வாழ்க்கை ஓவியத்தை.. தேடித் தொலைந்து.. பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்.. உன் பார்வையின்.. தீண்டலுக்காக

Feb 13, 2025,12:02 PM IST

- தேவி


உன் மெளனங்களை அணைத்துக் கொண்டு

பார்வைகளில் திளைத்துக் கொண்டு

உன் முச்சினை சுவாசித்து கொண்டு 

விரல் நுனியில் ஒளிந்து கொண்டு

உன் இதயத்தை உரசிக் கொண்டு 

உன் சிரிப்பினில் மூழ்கிக் கொண்டு 

கருவிழிகளில் நுழைந்து கொண்டு 

இதழ்களில் தேன் வார்த்தைகளை தூவி கொண்டு 

காதலின் மேகங்களை தழுவி கொண்டு


 


உயிரினை மாற்றிக் கொண்டு 

புது உலகினை தேடிக் கொண்டு 

காற்றினில் மிதந்து கொண்டு

காலத்தினை ரசித்துக் கொண்டு 

காதலின் ஓசையைக் கேட்டுக் கொண்டு 

மனதின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு 

மாற்றங்களை ஏற்றுக் கொண்டு 

மன ஓட்டத்தை படித்துக் கொண்டு 

மலரினை கையில் ஏந்தி கொண்டு 

மயக்கத்தினை பார்வையில் கடத்திக் கொண்டு 

வானவில்லின் பார்வையில் மிதந்து கொண்டு 

இமைகளின் இடையில் சிக்கிக் கொண்டு 

உன் தேடலில் தொலைந்து கொண்டு 

உன் அழகினில் மடிந்து கொண்டு  

வாழ்க்கையின் ஓவியத்தை

உன் பார்வையில் தேடி தொலைந்து 

பூத்து சிலிர்த்து நிற்கின்றேன் 

உன் பார்வையின் 

தீண்டலுக்காக....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்