சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நிலையைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது என்று பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி வந்து துடித்து பிறகு மருத்துவமனையில் சேர்த்து அதன் பிறகு ஆபரேஷன் நடந்து என்று ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து விட்டன.
இப்போது அவர் ஜாமீனுக்காக போராடிக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் வரை போயும் கூட அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மூளையில் பிரச்சினை என்றெல்லாம் உச்சநீதிமன்றத்தில் சொல்லிப் பார்த்து விட்டார்கள்.. அதற்கெல்லாம் மருந்து இருக்கிறது, சாதாரண நோய்தானே என்று கூறி விட்டது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் மெலிந்த நிலையில் காணப்படும் செந்தில் பாலாஜியின் உருவமும் பேசு பொருளாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வானதி சீனிவாசன், செந்தில் பாலாஜி நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில் செந்தில் பாலாஜி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், செந்தில் பாலாஜியின் உடல் நிலை அடிக்கடி மோசமாகிக் கொண்டிருப்பது, மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை சிறைத்துறை அவரை சரியாக கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் அவர் இருக்கிறார்.
அவருக்கு சரியான உணவோ மருத்துவ வசதியோ இல்லை கிடைக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழக அரசால் அவருக்குத் தேவையான மருத்துவத்தையோ, உடல் நிலையையோ கவனிக்க முடியாவிட்டால் மத்திய அரசின் உதவியை நாடலாம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை கொடுக்கலாம் என்று கூறினார் வானதி சீனிவாசன்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}