தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு வந்தே பாரத்.. செப்.24 முதல்.. சென்னை டூ திருநெல்வேலி!

Sep 20, 2023,06:11 PM IST

சென்னை: சென்னை- திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்., 24ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.


இதோ வருகிறது அதோ வருகிறது என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஒரு வழியாக வந்து விட்டது. சென்னை எழும்பூரிலிருந்து இருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில் செல்லும். எழும்பூரிலிருந்து இயக்கப்படவுள்ள முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. 




சென்னை  டூ நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50க்கு புறப்பட்டு இரவு 10.40க்கு நெல்லை சென்றடையும்.  வழியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களில் நிற்கும். அதேபோல காலை 6மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.


3வது வந்தே பாரத் ரயில்: தமிழ்நாட்டில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – மைசூரு  மற்றும் சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 


இந்த நிலையில் தற்போது 3வது வந்தே பாரத் ரயிலை தமிழ்நாடு பெறுகிறது. தமிழ்நாட்டுக்கு மேலும் சில வந்தே பாரத் ரயில்களும் வரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. படிப்படியாக இவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்