சென்னை: சென்னை- திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்., 24ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
இதோ வருகிறது அதோ வருகிறது என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஒரு வழியாக வந்து விட்டது. சென்னை எழும்பூரிலிருந்து இருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில் செல்லும். எழும்பூரிலிருந்து இயக்கப்படவுள்ள முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை டூ நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50க்கு புறப்பட்டு இரவு 10.40க்கு நெல்லை சென்றடையும். வழியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களில் நிற்கும். அதேபோல காலை 6மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
3வது வந்தே பாரத் ரயில்: தமிழ்நாட்டில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – மைசூரு மற்றும் சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் தற்போது 3வது வந்தே பாரத் ரயிலை தமிழ்நாடு பெறுகிறது. தமிழ்நாட்டுக்கு மேலும் சில வந்தே பாரத் ரயில்களும் வரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. படிப்படியாக இவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}