வந்தே பாரத் மீது மோதிய பசு.. காலைக்கடன் போய்க்கொண்டிருந்தவர் மீது விழுந்து.. அவர் பலி!

Apr 21, 2023,11:56 AM IST
ஜெய்ப்பூர்:  ராஜஸ்தானில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் ஒரு பசு மாடு மீது மோதியது. அந்த மாடு தூக்கி எறியப்பட்டு, தண்டவாளத்திற்கு ஓரமாய் உட்கார்ந்து காலைக்கடன் போய்க் கொண்டிருந்த நபர் மீது விழுந்ததில், அந்த நபர் அங்கேயே இறந்து போனார்.

இதுவரை வந்தேபாரத் மீது பல மாடுகள் மோதியுள்ளன. இதில் ரயிலின் முகப்புப் பகுதி சேதமடைந்துள்ளது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக வந்தேபாரத் மீது மோதிய மாடு விழுந்து ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.



ஆல்வார் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரவல்லி விகார் காவல் நிலையத்திற்குட்பட்ட இப்பகுதியில் சிவதயாள் சர்மா என்ற நபர் தண்டவாளத்திற்கு அருகே அமர்ந்து காலைக்கடனை செலுத்திக் கொண்டிருந்தனர். அவர் ஓய்வு பெற்ற ரயில்வே எலக்ட்ரீசியன் ஆவார்.  அப்போது காலை 8.30 மணி இருக்கும்.


அந்த சமயத்தில் வந்தே பாரத் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே தனது காலைக்கடனை செலுத்திக் கொண்டிருந்தார் சிவதயாள் சர்மா. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு பசு மாடு தண்டவாளத்தின் குறுக்கே போய் விட்டது. ரயில் வந்த வேகத்தில் மாடு அப்படியே தூக்கி வீசப்பட்டது. தூக்கி எறியப்பட்ட அந்த மாடு நேராக சிவதயாள் சர்மா மீது வந்து விழுந்தது.

மிகப் பெரிய எடையுடன் கூடிய மாடு மேலே விழுந்ததில் வயதான சிவதயாள் சர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார். அவரது உடலை மீட்ட போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்