வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கலுடன் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். மீண்டும் அதே தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நான்கு தொகுதிகளை அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இவருடன் உ.பி மேற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தன்னிடம், ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் சொந்தமாக எந்த வாகனமும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வருமான, சேமிப்பு, முதலீடுகள் என மொத்தம் ரூபாய் 9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் அவரிடம் உள்ளன. ராகுல் காந்தியின் ரொக்கக் கையிருப்பு ரூ. 55,000 ஆகும். வங்கியில் உள்ள ரொக்க இருப்பு ரூ. 26.25 லட்சமாகும். ஷேர்கள் உள்ளிட்டவை மூலம் ரூ. 4.33 கோடி வைத்துள்ளார். ராகுல் காந்தியிடம் ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான நகைககள் உள்ளன.
டெல்லியில் விவசாய நிலம், அலுவலகம், உள்ளிட்ட ரூ. 11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் ராகுல் காந்தியிடம் உள்ளன. டெல்லி மேஹ்ராலி பகுதியில் உள்ள நிலமானது, பிரியங்கா காந்தியை இணை உரிமையாளாரக் கொண்டதாகும். ஹரியானா மாநிலம் குருகிராமில் ராகுல் காந்திக்கு ரூ. 9 கோடி மதிப்பிலான அலுவலகம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் படி அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 15 .89 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு மொத்தம் ரூபாய் 72 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}