வயநாடு தொகுதியில் போட்டியிடும்.. ராகுல் காந்திக்கு எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா..?

Apr 04, 2024,05:08 PM IST

வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கலுடன் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார்.


கேரளாவில் உள்ள  20 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.  கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். மீண்டும் அதே தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.


கேரளாவில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  நான்கு தொகுதிகளை அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை  நேற்று தாக்கல் செய்தார். இவருடன் உ.பி மேற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




ராகுல் காந்தி தன்னிடம், ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  தன்னிடம் சொந்தமாக எந்த வாகனமும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வருமான, சேமிப்பு, முதலீடுகள் என மொத்தம் ரூபாய் 9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் அவரிடம் உள்ளன. ராகுல் காந்தியின் ரொக்கக் கையிருப்பு ரூ. 55,000 ஆகும். வங்கியில் உள்ள ரொக்க இருப்பு ரூ. 26.25 லட்சமாகும். ஷேர்கள் உள்ளிட்டவை மூலம் ரூ. 4.33 கோடி வைத்துள்ளார்.  ராகுல் காந்தியிடம் ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான நகைககள் உள்ளன. 


டெல்லியில் விவசாய நிலம், அலுவலகம், உள்ளிட்ட ரூ. 11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் ராகுல் காந்தியிடம் உள்ளன. டெல்லி மேஹ்ராலி பகுதியில் உள்ள நிலமானது, பிரியங்கா காந்தியை இணை உரிமையாளாரக் கொண்டதாகும். ஹரியானா மாநிலம் குருகிராமில் ராகுல் காந்திக்கு ரூ. 9 கோடி மதிப்பிலான அலுவலகம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் படி அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 15 .89 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


ராகுல் காந்தி எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு மொத்தம் ரூபாய் 72 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்