"மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை".. இடி ரெய்டு குறித்து விசிக ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

Mar 10, 2024,09:06 PM IST

சென்னை: தனது வீட்டில் நடந்த இடி ரெய்டு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.


சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தவர் ஆதவ் அர்ஜூனா. இணைந்தவுடன் அவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவியும் தரப்பட்டது.  அவரது வீடு தேனாம்பேட்டையில் உள்ளது. அங்கு நேற்று இடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.




இந்த ரெய்டு குறித்து தற்போது ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகி இருந்தது. நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை ஒரு நாள் சோதனை நடத்தப்பட்டது.


பொது வாழ்வில் வெளிப்படத் தன்மையோடு இருக்க வேண்டியது அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதன் அடிப்படையில் சோதனையின் போது அதிகாரிகள் கேட்டு அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.


இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழி நின்று உறுதியோடு எனது பயணம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?

news

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்

news

Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?

news

அழகு மயில்!

news

என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)

news

மதியொளி முகமோ!

news

குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்