சென்னை: தனது வீட்டில் நடந்த இடி ரெய்டு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தவர் ஆதவ் அர்ஜூனா. இணைந்தவுடன் அவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவியும் தரப்பட்டது. அவரது வீடு தேனாம்பேட்டையில் உள்ளது. அங்கு நேற்று இடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ரெய்டு குறித்து தற்போது ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகி இருந்தது. நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை ஒரு நாள் சோதனை நடத்தப்பட்டது.
பொது வாழ்வில் வெளிப்படத் தன்மையோடு இருக்க வேண்டியது அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதன் அடிப்படையில் சோதனையின் போது அதிகாரிகள் கேட்டு அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழி நின்று உறுதியோடு எனது பயணம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}