"மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை".. இடி ரெய்டு குறித்து விசிக ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

Mar 10, 2024,09:06 PM IST

சென்னை: தனது வீட்டில் நடந்த இடி ரெய்டு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.


சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தவர் ஆதவ் அர்ஜூனா. இணைந்தவுடன் அவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவியும் தரப்பட்டது.  அவரது வீடு தேனாம்பேட்டையில் உள்ளது. அங்கு நேற்று இடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.




இந்த ரெய்டு குறித்து தற்போது ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகி இருந்தது. நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை ஒரு நாள் சோதனை நடத்தப்பட்டது.


பொது வாழ்வில் வெளிப்படத் தன்மையோடு இருக்க வேண்டியது அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதன் அடிப்படையில் சோதனையின் போது அதிகாரிகள் கேட்டு அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.


இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழி நின்று உறுதியோடு எனது பயணம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்