விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

Nov 21, 2024,06:22 PM IST

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.


சமீபத்தில் கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய். கடந்த மாதம் நடந்திய மாநாட்டின் மூலம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர் தவெக தலைவர் விஜய். மாநாடு நடந்து கிட்டதட்ட 20 நாட்களுக்கு மேலான நிலையில் இன்று வரை மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு குறித்து தான் அரசியல் கட்சி தலைவர்கள் இன்றுவரை பேசி வருகின்றனர். சிலர் பாசிட்டிவாகவும், சிலர் நெகடிவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




இந்நிலையில், டிசம்பர் 6ம் தேதி ஆதவ் அர்ஜூனா எழுதிய அம்பேத்கர் குறித்த புத்தகத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிடுகிறார் என்றும், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் சில நாட்களாக தீயாக பரவி வந்தது. ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமாவளவனும் பங்கேற்க உள்ளதால், இருவரும் வருகின்ற 2026ம் தேர்தலில் கூட்டணி வைப்பதற்கான அச்சாரம் தான் இந்த புத்தக வெளியீட்டு விழா என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.


இந்த செய்திக்கு திருமாவளவன் பல முறை மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


இந்தநிலையில், சென்னையில் டிசம்பர் 6ம் தேதி  நடைபெற உள்ள புத்த வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கொண்டு தான் திருமாவளவன் பங்கேற்க மறுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. திருமாவளவன் மறுப்பு தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒவ்வொரு விஷயத்திற்கும் வித்தியாசமாக முடிவெடுக்கும் விஜய் இதற்கு என்ன முடிவெடிப்பார் என்று பெருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்