சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

Jan 28, 2025,06:10 PM IST

சென்னை: சீமான் பேசுவதை பார்த்தால் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என்ற கேள்வி எழுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தொல் திருமாவளவன் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்,  இடதுசாரி இயக்கங்களின் தூண்களாக நின்றவர்கள், அம்பேத்கர் இயக்கங்களுடன் கைகோர்த்து நின்றபோது நம்பிக்கையை பெற முடிந்தது. பொதுவாக அம்பேத்கர் இயக்கங்களை ஜாதிய இயக்கங்களாக புறம்தள்ளிய காலம் உண்டு. அந்த இயக்கங்களை ஊக்குவிக்காமல் கடுமையான விமர்சனங்களை வைத்த காலங்கள் உண்டு. அதன் மூலம் அம்பேத்கர் இயக்கங்கள் தனிமை தனிமைப்பட்டு சுருங்கிப்போன வரலாறு உண்டு. 




வலது சாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழிக்க நினைக்கிறது. தேர்தல் நடைமுறைதான் பாஜக வளர காரணமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் அரசியல் கோட்பாடோடும், வலதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தோடும் வலிமையாக உள்ளன. தேர்தல்  களத்தில் தலித்களை எவ்வாறு கைப்பற்றுவது என்று வலதுசாரி கைதேர்ந்து உள்ளனர். இடதுசாரி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்.


தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் கூறியது தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சியாகும். சீமான் பொருத்தம் இல்லாத அரசியலை தற்போது பேசிக்கொண்டு இருக்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகளை பெற இந்த உத்தியை பின்பற்றுகிறாரா என என்ன தோன்றுகிறது. சீமான் பாசிச அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். 


தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். பெரியாரை விமர்சித்து பாஜக ஆதரவு வாக்குகளை பெற சீமான் முயற்சிக்கிறாரா என்று ஐயம் எழுகிறது. சீமானின் அரசியல் இனவாதத்தை நோக்கி பாசிச கூறுகளை கொண்டதாக உள்ளது. தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியலை சீமான் செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்