சென்னை: ஆதவ் அர்ஜூனா பேட்டியால், திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக திமுகவுடனான கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேட்டி அளித்து வருகிறார். வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் துணை இல்லாமல் திமுகவால் ஜெயிக்க முடியாது என்று அவர் கூறியது திமுக தலைவர்களை கோபப்பட வைத்துள்ளது.
அர்ஜூனா பேச்சுக்கு விசிக தலைவர்கள் சிலரே கூட கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ. ராசாவும் இந்தப் பேட்டியைக் கண்டித்துள்ளார். திருமாவளவன் இந்தப் பேச்சை ஏற்க மாட்டார் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியிரு்நதார்.
இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் அர்ஜூனாவின் பேட்டியால் திமுகவுடனான உறவில் எந்த விரிசலும் ஏற்படாது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில், திமுக-விசிக ஆகிய இரண்டு கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்தவித சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்புகளும் இல்லை. என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான வீடியோவில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்து பதிவிடப்பட்டது. இந்த கருத்தை பல்வேறு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது மேலும் மேலும் விவாதத்திற்கு இடமளித்து விட்டது.
அது திமுக மற்றும் விசிக இடையில் எந்தவித சிக்கலும் ஏற்படுத்தாது. கட்சியின் முன்னணி தோழர்கள் உடன் உட்கட்சி விவகாரங்களை கலந்து ஆலோசித்து தான் எந்தவித முடிவும் எடுப்போம். ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருடன் தொலைபேசி வழியாக பேசியிருக்கிறேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}