துளிர்த்தது மரத்தின் அடி தண்டு மட்டுமல்ல....!

Jul 27, 2026,03:12 PM IST

- அ. வென்சி ராஜ்


நேற்று ஒரு தோட்டத்தில் இதை பார்த்ததும் புகைப்படம் எடுத்துவிட்டேன்....


துளிர்த்தது மரத்தின் அடி தண்டு மட்டுமல்ல....  என் மனதின் வார்த்தைகளும் தான்...


வெட்டிய இடத்தில் துளிர் விடுவது மரத்தின் தனிச்சிறப்போ...


துளிர் என்பது மரத்தின் உச்சியில் மட்டுமல்ல.. கீழ்கட்டையிலும் தளிர்த்திடுவேன் என கருத்து சொல்கிறதோ..


வேர் மட்டும் இருந்தால் கூட விருட்சமாய் எழுந்திடுவேன் என மனித குலத்திற்கு சொல்லுகிறதோ ...


வெட்டுகிற மனிதனையே மன்னித்து, மீண்டும் விருட்சமாகி கனி தந்து  விருந்து வைத்து மன்னிப்பின் இலக்கணம் பேசுகிறதோ....




முதல் தோல்வியிலே முற்றும் துவண்டு விடும் நமக்கு வேர்வரை வெட்டினாலும் மீண்டெழுவேன் என வகுப்படுகிறதோ....


எது எப்படியோ...


மரங்கள் எப்பொழுதுமே எல்லா நிலையிலும் நமக்கு வகுப்பெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன....


மரம் வளர்ப்போம்!

மனிதம் துளிர்ப்போம்!


(அ. வென்சி ராஜ்... திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பட்டுடையானிருப்பு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்