- அ.வென்சி ராஜ்
நம்முள் இருக்கும் மனம்...
மனம் எத்துனை ஆழம் என்பது புரியுமா?
கடவுளின் கைகளில் இருக்கும் அழகான பூச்செண்டு தான் மனம்...
புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு புதிர் அல்ல மனம்...
புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு
என்றுமே புரியாத புதிர் தான் மனம்....

விரும்புகிறவர்களுக்கு விருச்சிக மரம் ...
பாசம் வைப்பவர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் . ..
பாதகம் செய்பவருக்கு பாதை காட்டும் பலகை ..
தேடுகிறவர்களுக்கு திகட்டாத புதையல் ...
தொலைத்து விட நினைப்பவர்களுக்கு தொலைதூர கானல் நீர் ...
அன்புக்கு என்றுமே அடிமை...
அடக்குமுறைக்கு அப்பாற்பட்டது...
மொத்தத்தில்.
நான் என்ற அகந்தை இல்லாமல். ..
நான்தான் என்ற கர்வம் கொள்ளாமல். . .
நாம் நாமாகவே இருக்கும் வரை...
நல்லவள் தான் நம் மனம்.....
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}