- அ.வென்சி ராஜ்
நம்முள் இருக்கும் மனம்...
மனம் எத்துனை ஆழம் என்பது புரியுமா?
கடவுளின் கைகளில் இருக்கும் அழகான பூச்செண்டு தான் மனம்...
புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு புதிர் அல்ல மனம்...
புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு
என்றுமே புரியாத புதிர் தான் மனம்....

விரும்புகிறவர்களுக்கு விருச்சிக மரம் ...
பாசம் வைப்பவர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் . ..
பாதகம் செய்பவருக்கு பாதை காட்டும் பலகை ..
தேடுகிறவர்களுக்கு திகட்டாத புதையல் ...
தொலைத்து விட நினைப்பவர்களுக்கு தொலைதூர கானல் நீர் ...
அன்புக்கு என்றுமே அடிமை...
அடக்குமுறைக்கு அப்பாற்பட்டது...
மொத்தத்தில்.
நான் என்ற அகந்தை இல்லாமல். ..
நான்தான் என்ற கர்வம் கொள்ளாமல். . .
நாம் நாமாகவே இருக்கும் வரை...
நல்லவள் தான் நம் மனம்.....
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}