காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி

Aug 02, 2025,08:56 PM IST

சென்னை: நடிகர் மதன்பாப் காலமானார். அவருக்கு வயது 71. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை காலமானார்.


சென்னையைச் சேர்ந்த மதன்பாப் ஒரு இசைக் கலைஞர், காமெடியன் என பல்வேறு அவதாரங்கள் கொண்டவர். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவை படம்தான் இவரது முதல் படம். ஆனால் இயக்குநர் கே.பாலச்சந்தரால் இவரது தனித்துவமான காமெடித் திறமை அடையாளம் காணப்பட்டு வெள்ளித் திரையில்  பிரபலமானார்.


சினிமாவில் அவர் பிரபலமாக அவரது சிரிப்புதான் முக்கியக் காரணம். தனித்துவமான சிரிப்பு மற்றும் காமெடியால் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். சிரிப்புக்காகவே பிரபலமான குமரிமுத்து போல, மதன் பாப்பின் சிரிப்பும் தனித்துவமானதாக இருந்ததால் அவர் வேகமாக பிக்கப் ஆகி விட்டார்.




வானமே எல்லை, தெனாலி, தேவர் மகன், பிரண்ட்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மதன் பாப். மதன்பாப் மற்றும் வடிவேலு இடம் பெற்ற பல படங்களில் அவருக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது. அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.


அவரது உடல் அடையாறில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் மதன் பாப் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!

news

காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி

news

இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!

news

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!

news

நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை!

news

இன்று ஒரு கவிதை.. இனிமைத் தமிழ் மொழி எமது!

அதிகம் பார்க்கும் செய்திகள்