சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வீட்டின் முன்பு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என்று எந்த விசேஷமாக இருந்தாலும் சரி அந்த நேரத்தில் ரஜினிகாந்த்தின் சென்னை போயஸ் தோட்டத்து வீட்டு முன்பு ரசிகர்கள் அவரை சந்திக்க திரண்டு விடுகிறார்கள். ரஜினிகாந்த் ஊரில் இருந்தால் வெளியில் கேட்டுக்கு அருகே நின்று ரசிகர்களை சந்திக்கிறார்.

அந்த வகையில் இப்போதும் பொங்கல் வாழ்த்து சொல்வதற்காக ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். பெரும் திரளாக கூடியிருந்த ரசிகர்களைப் பார்ப்பதற்காக வெளியே வந்தார் ரஜினி. கேட்டுக்கு வெளியே நின்று தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டி மகிழ்ந்தார். ரசிகர்களும் தலைவா தலைவா என்று நாடி நரம்பு புடைக்க கத்தி வாழ்த்துக் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள். அனைவரும் ஆரோ்கியத்துடனும் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும். நன்றி என்று கூறினார் ரஜினிகாந்த்.
வேட்டையன்.. ஸ்பெஷல் வாழ்த்து போஸ்டர்

இதற்கிடையே, வேட்டையன் படக் குழுவினர் பொங்கலையொட்டி சிறப்பு வாழ்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி படு ஸ்டைலிஷாக அதில் காட்சி தருகிறார். மறுபக்கம் கூலர் அணிந்தபடி ஆக்ரோஷமான முகத்துடன் கூடிய ரஜினிகாந்த்தும் அதில் இடம் பெற்றிருக்கிறார்.
இந்த ஸ்டில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்துள்ளது. ரஜினியின் தரிசனம் மற்றும் வேட்டையன் தரிசனம் என் டபுள் பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது ரஜினி ரசிகர்களுக்கு. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால் சலாம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதைத் தொடர்ந்து வேட்டையான் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் இது. இப்படத்தை ஜெய் பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். லைக்கா படத்தைத் தயாரித்துள்ளது. பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் கூடிய இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
{{comments.comment}}