சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வீட்டின் முன்பு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என்று எந்த விசேஷமாக இருந்தாலும் சரி அந்த நேரத்தில் ரஜினிகாந்த்தின் சென்னை போயஸ் தோட்டத்து வீட்டு முன்பு ரசிகர்கள் அவரை சந்திக்க திரண்டு விடுகிறார்கள். ரஜினிகாந்த் ஊரில் இருந்தால் வெளியில் கேட்டுக்கு அருகே நின்று ரசிகர்களை சந்திக்கிறார்.

அந்த வகையில் இப்போதும் பொங்கல் வாழ்த்து சொல்வதற்காக ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். பெரும் திரளாக கூடியிருந்த ரசிகர்களைப் பார்ப்பதற்காக வெளியே வந்தார் ரஜினி. கேட்டுக்கு வெளியே நின்று தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டி மகிழ்ந்தார். ரசிகர்களும் தலைவா தலைவா என்று நாடி நரம்பு புடைக்க கத்தி வாழ்த்துக் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள். அனைவரும் ஆரோ்கியத்துடனும் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும். நன்றி என்று கூறினார் ரஜினிகாந்த்.
வேட்டையன்.. ஸ்பெஷல் வாழ்த்து போஸ்டர்

இதற்கிடையே, வேட்டையன் படக் குழுவினர் பொங்கலையொட்டி சிறப்பு வாழ்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி படு ஸ்டைலிஷாக அதில் காட்சி தருகிறார். மறுபக்கம் கூலர் அணிந்தபடி ஆக்ரோஷமான முகத்துடன் கூடிய ரஜினிகாந்த்தும் அதில் இடம் பெற்றிருக்கிறார்.
இந்த ஸ்டில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்துள்ளது. ரஜினியின் தரிசனம் மற்றும் வேட்டையன் தரிசனம் என் டபுள் பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது ரஜினி ரசிகர்களுக்கு. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால் சலாம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதைத் தொடர்ந்து வேட்டையான் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் இது. இப்படத்தை ஜெய் பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். லைக்கா படத்தைத் தயாரித்துள்ளது. பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் கூடிய இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}