டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் (துணை ஜனாதிபதி) தேர்தல் இன்று காலை தொடங்கியது. முதல் வாக்கை பிரதமர் நரேந்திர மோடி செலுத்தினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டியும், இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஜெகதீப் தன்கர் ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்ததால் இந்த தேர்தல் நடக்கிறது. தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் எண்களின் விளையாட்டு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். பாஜகவில் தீவிரமாக ஈடுபட்டவர். முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் எம்.பி. என பல பதவிகளை வகித்தவர். ஆளுநராகவும் இருந்துள்ளார். தற்போது மகாராஷ்டிராவின் கவர்னராக இருக்கிறார். சுதர்சன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. இந்த முறை இரு வேட்பாளர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வாக்குப் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் electoral college-ல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் உள்ளார்கள். மேலும் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்களும் electoral college-ல் இடம் பெற தகுதியுடையவர்கள். எனவே, அவர்களும் தேர்தலில் பங்கேற்கலாம். அதாவது இசைஞானி இளையராஜா, நடிகர் கமல்ஹாசன் போன்றோரும் வாக்களிக்க முடியும்.
ராஜ்யசபாவின் 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (ஐந்து இடங்கள் காலியாக உள்ளன), ராஜ்யசபாவின் 12 நியமன உறுப்பினர்கள் மற்றும் லோக்சபாவின் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (ஒரு இடம் காலியாக உள்ளது) ஆகியோர் electoral college-ல் உள்ளனர். electoral college-ல் மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர் (தற்போது 781 பேர் உள்ளனர்).
இதில் பெரும்பாலான வாக்குகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக உள்ளன. NDA-வுக்கு லோக்சபாவில் 293 எம்.பி.க்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் 129 உறுப்பினர்கள் உள்ளனர். ஆக மொத்தம் 422 உறுப்பினர்களுடன் NDA கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளது. INDIA கூட்டணிக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்), சிபிஎம், ஆர்ஜேடி, ஜேஎம்எம், ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்த்து சுமார் 300 எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் கட்சி கொறடா உத்தரவு கிடையாது. எனவே, எம்.பி.க்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். இது ஒரு ரகசிய வாக்கெடுப்பு. BJD, BRS போன்ற கட்சிகள் தேர்தலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளன. நவீன் பட்நாயக் தலைமையிலான BJD கட்சி, NDA மற்றும் INDIA ஆகிய இரண்டு கூட்டணிகளுக்கும் "சமமான தூரத்தை" கடைப்பிடிக்கும் கொள்கையின் ஒரு பகுதியாக துணை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமாக அமையும். BJD-க்கு ராஜ்யசபாவில் ஏழு எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். லோக்சபாவில் யாரும் இல்லை.
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நா ளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
{{comments.comment}}