85 பேருடன் சேர்ந்து 1 லட்சம் கோடியை சுருட்டிய  பெண் தொழிலதிபர்.. மலைக்க வைக்கும் மெகா மோசடி!

Apr 11, 2024,04:07 PM IST

ஹனோய்:  வியட்நாமைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 1 லட்சத்து 4 ஆயிரத்து 214 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்து சிக்கியுள்ளார். அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படவுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.


வியட்நாமைச் சேர்ந்தவர் டிருவோங் மை லான். மிகப் பெரிய தொழிலதிபர். வான் தின் பாட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும் இவரது கூட்டாளிகள் 85 பேரும் சேர்ந்து மிகப் பெரிய பண மோசடியில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். வியட்நாமை இந்த வழக்கு பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் செய்த குற்றத்துக்காக இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோர்ட்டே கடும் கோபத்துடன் கூறியுள்ளது.




கடந்த பத்து வருடங்களில் சைய்கான் கமர்ஷியல் வங்கியில் இந்த அளவுக்கு பணத்தை சுருட்டியுள்ளது இந்த கும்பல்.  மொத்தம் 85க்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.. அனேகமாக இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வழக்கில் டிருவோங் மை லான் தவிர முன்னாள் இன்னாள் வங்கி அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் என பலரும் சிக்கியுள்ளனர். மிகப் பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு நாட்டையே அதிர வைத்துள்ளார்கள்.



அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், வங்கி விதிகளை மீறியது உள்ளிட்ட புகார்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.  தன் மீதான புகாரை மை லான் மறுத்துள்ளார். தனக்குக் கீழ் உள்ளவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இவர்தான் அத்தனை மோசடிகளுக்கும் மூளை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். மை லானுக்கு மரண தண்டனைதான் தர வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். கோர்ட்டும் கூட மிகக் கடுமையான தண்டனைதான் சரியானது என்று கருத்து தெரிவித்துள்ளது.


மை லான் கைது செய்யப்பட்டு அவரது முறைகேடுகள் வெளியானதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹனாய் நகரில் போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்