விக்கிரவாண்டி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்ற கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் சார்பில் அதன் பொருளாளர் உறுதிமொழியை வாசிக்க விஜய் உள்ளிட்ட அனைவரும் அதை ஏற்றனர்.
தவெக உறுதிமொழி

நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம், மத நல்லிணக்கணம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்.
மக்களாட்சி, மதசார்பின்மை, சமூகம் நீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவைகளாக கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். ஜாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன் என உறுதி மொழி ஏற்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}