"என்னுடைய உச்சம்.. உனக்கேன் அச்சம்".. ரஜினியை சீண்டிய மதுரை விஜய் ஃபேன்ஸ்!

Aug 06, 2023,03:05 PM IST
மதுரை: ஜெயிலர் பட விழாவில் காக்கா பருந்து கதை கூறிய நடிகர் ரஜினிகாந்த்தை சீண்டி மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிகழ்ச்சி நடந்தது. அதில் ரஜினிகாந்த்தின் பேச்சு சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. காக்காய் - பருந்து கதை ஒன்றை அந்த விழாவின்போது ரஜினிகாந்த் கூறினார்.



அதில் அவர் கூறிய காக்கா என்பது நடிகர் விஜய்யைத்தான் குறிப்பிடுவதாக பரபரப்பு நிலவுகிறது. ரஜினிகாந்த் பொதுவாக சக நடிகர்களை, குறிப்பாக போட்டியாளர்களை இப்படியெல்லாம் விமர்சித்து பேசியதில்லை. ஆனால் இந்த முறை அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. 

இந்த நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனர். இது ஜெயிலர் பட  ரஜினி பேச்சை விட பரபரப்பாகி விட்டது. அந்த போஸ்டரில், விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா படத்தைப் போட்டுள்ளனர். இன்னொரு பக்கம் ரஜினி படம் உள்ளது.  நடுவே, "என்னுடைய உச்சம்.. உனக்கு ஏன் அச்சம்.. என் நெஞ்சில் குடியிருக்கும்  இளைய தளபதி தளபதி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மதுரை மண்ணின் மைந்தன் விஜய் அண்ணா ரசிகர்கள் என்று போஸ்டரை தயாரித்தவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டரால் ரஜினி ரசிகர்கள் டென்ஷனாகியுள்ளனர். பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை கிழித்து எறிந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்