சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து விஜய் கொடிக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
விஜய் ஏற்றிய கொடியானது மஞ்சள் நிறத்தில் உள்ளது. நடுவே விஜய்யின் சிரித்த முகம் காணப்படுகிறது. வேறு எந்த அடையாளமும் இந்த கொடியில் இடம் பெறவில்லை. முன்னதாக வாகை மலர் இடம் பெறப் போகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. ஒரு வேளை இதுதான் கொடியா அல்லது ஒத்திகைக்காக மட்டும் இதை ஏற்றிப் பார்த்தார்களா என்று தெரியவில்லை.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அவரும் தனது தீவிர அரசியல் களத்திற்கு நெருங்கி வந்து விட்டார். கோட் படத்தை முடித்து விட்ட விஜய், மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பிறகு அவர் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார். இந்த நிலையில் வருகிற 22ம் தேதி கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்யவுள்ளார்.
இந்தக் கொடி குறித்தும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு விஜய் வந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் வந்திருந்தார். அவர் முழுக்க முழுக்க மஞ்சள் நிற உடையில் வந்திருந்தார். இதுவே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எதையோ உணர்த்துகிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே, பனையூர் அலுவலகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் ஒரு கொடி மெல்ல உயர்ந்து பட்டொளி வீசிப் பறந்தது.

மஞ்சள் நிறத்தில் அந்தக் கொடி இருந்தது. கொடியின் நடுவே விஜய்யின் முகம் இருந்தது. இரண்டு முறை இந்தக் கொடி ஏற்றி இறக்கப்பட்டது. கருப்பு நிற உடையில் இருந்த விஜய்தான் கொடியை ஏற்றி இறக்கி ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்தக் கொடியேற்றம் விஜய் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. இதுதான் கட்சிக் கொடியா என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. உண்மையிலேயே இதுதான் கொடியா அல்லது டம்மி கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எது எப்படியோ இந்தக் கொடி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது. விஜய் ரசிகர்கள் படு வேகமாக இதை பரப்பி வருகின்றனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}