கோட் படப்பிடிப்பிற்காக.. துபாய்க்கு பறந்த.. நடிகர் விஜய்..!

May 11, 2024,10:20 AM IST

சென்னை: கோட் படம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இப்படத்தின் படப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றார் நடிகர்  விஜய்.


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய், தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.




ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவருடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். டாப் ஹீரோயினாக வலம் வந்த சினேகா மற்றும் லைலாவும் நடித்து வருகின்றனர். இது தவிர யோகி பாபு, ஜெயராம், மோகன், போன்ற  நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து மக்களை கவர உள்ளர். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை திரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், அதில் அவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.


கோட் படத்தின் அப்டேட்டுகளையும் வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து  இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ந்து கோட் பட போஸ்டர்கள் ஒன்னு, ரெண்டு, மூணு ,என்ற அடிப்படையில்   வெளியிட்டார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் 

 ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.


இந்த நிலையில் கோட்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்ட உள்ளது. அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் விஜய் விமான மூலம் துபாய் புறப்பட்டு சென்றார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் கேரளாவுக்குச் சென்றார். அங்கு ரசிகர்களை விஜய் சந்திப்பார் எனவும் கூறப்பட்டது. அப்போது கேரளா ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்துடனும் அவரை வரவேற்றனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்