சென்னை: மிச்சாங் புயல் மழைவெள்ள நிவாரணப்பணிகள் குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகியிடம் தொலைபேசியில் விசாரித்துள்ளார் நடிகர் விஜய்.
மிச்சாங் புயல் காரணமாக வரலாறு காணாத மழைப் பொழிவு சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் ஏற்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதித்தன. இங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கிட விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் படப்பிடிற்காக வெளிநாட்டில் உள்ளார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். வேண்டுகோளை ஏற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நிவாரண உதவிகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர். அது குறித்து இன்று போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார் விஜய்.
விஜய் : எல்லாம் சேபா இருக்கா
நிர்வாகி: எல்லாரும் சேபா தாண்ணா இருக்கோம். கீழ தண்ணி இருக்குனா தளபதிக்காக ஆபீஸ் ஓபன் பண்ணி இருக்கோம் அண்ணா... அதுல எல்லாரையும் தங்க வைச்சிருக்கோம்னா
விஜய்: இந்த நிலமையில கூட நீங்க இதெல்லாம் பண்ணீட்டு இருக்கீங்கபா. ரொம்ப நன்றி.
நிர்வாகி: தாங்ஸ்னா
விஜய்: உங்க சேப்டிய பார்த்துக்கோங்க
நிர்வாகி: கண்டிப்பானா, கண்டிப்பானா எல்லாம் உங்களுக்காக தான்னா. நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக தானா
விஜய்: ஒகே. நா வந்ததுக்கப்பறம் உங்களை மீட் பண்றேன்பா. பீ சேப் என்று பேசியுள்ளார் நடிகர் விஜய்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}