சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சி ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கொடி அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாசகங்களால் ரசிகர்களிடையே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை சமீபத்தில் துவங்கினார். இந்த கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சி ஆகஸ்ட் 22ம் தேதி காலை 09.15 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செம மாஸான அறிக்கை ஒன்றை விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே...சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024, ஆகஸ்ட் 22.

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டு விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சி தலைவராக அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் செம டிரெண்டாகி வருகிறது.
கட்சியின் தீம் சாங்கை கவிஞர் விவேக் எழுதியிருப்பதாகவும் இசையமைப்பாளர் தமன் அதற்கு இசையமைத்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் நம்ம கொடி பறக்கும் என்று விஜய் தனது ஸ்டைலில் பன்ச்சாக கூறியிருப்பது ரசிகர்களை டபுள் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. நாளை பனையூர் பகுதி எப்படி கலங்கப் போகிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}