பிக்பாஸ் தமிழ் சீசன் 8 : கமல் மாதிரி இல்லை.. யதார்த்தமாக பேசும் விஜய் சேதுபதி.. ஹேப்பி அண்ணாச்சி!

Oct 06, 2024,08:21 PM IST

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் துவக்க விழா முடிவதற்கு முன்பே அனைவரிடமும் பாராட்டை பெற்று விட்டார் விஜய் சேதுபதி. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பிக்பாஸ் ரசிகர்களும் தற்போது விஜய் சேதுபதியின் ரசிகர்களாக மாறி, வாழ்த்து கூறி வருகிறார்கள்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு, அடுத்ததாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிக்பாஸ் ஓடிடி வெர்ஷனை சிம்பு தொகுத்து வழங்கியதால், இனி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.


கமல், சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர். அவரிடம் அனைவருக்கும் மிகப் பெரிய மரியாதை உண்டு. அதனால் அவர் கண்டிப்புடன் இருந்தால் அனைவருக்கும் பயம் இருக்கும். ஆனால் விஜய் சேதுபதி, எப்போதுமே பக்கத்து வீட்டுக்காரர் போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவர். அவர் எப்படி இதை பிக்பாஸ் போட்டியை, போட்டியாளர்களை கையாள்வார் என்ற சந்தேகம், கேள்வி அனைவருக்குள்ளும் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியின் துவக்க விழாவில், அதுவும் துவங்கிய சிறிது நேரத்திலேயே அந்த சந்தேகங்களை போக்கி விட்டார் விஜய் சேதுபதி.




முதல் போட்டியாளராக வந்த ரவீந்திரனிடம், எனக்கு ஏதாவது அட்வைஸ் இருந்தால் சொல்லுங்க என மிக யதார்த்தமாக கேட்டார். அதே போல் இரண்டாவதாக தன்னுடன் மகாராஜா படத்தில் நடித்த சச்சா போட்டியாளராக வந்த போது அவரிடம், டென்ஷன் ஆகாம ரிலாக்சாக பேசு என உண்மையான மகளுக்கு சொல்வதை போல் அறிவுரை வழங்கினார். அடுத்து வந்த தர்ஷா குப்தாவிடமும் அவரது ஃபாலோவர்களை பற்றி கேட்டு, நீங்களே பெரிய செலிபிரட்டியாக இருக்கீங்களே என்றார். 


தான் ஒரு பெரிய நடிகர் என்ற ஈகோ இல்லாமல் சத்யாவிடம், உங்க கோட் சூப்பராக இருக்கு. பேசாம கோட் மாத்திக்கலாம் போல என வெளிப்படையாக பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது. இது விஜய் சேதுபதிக்கு அனைவரிடமும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.


அதேசமயம், இப்ப ஜாலியா பேசுறேன்னு எடுத்துக்காதீங்க.. சீரியஸாகவும் பேசுவேன் என்றும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் குறிப்பாக உணர்த்தி அனுப்பி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. எனவே முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அதிரடி காட்டவும் அவர் தயங்க மாட்டார் என்று நம்பலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்