சென்னை : விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய் சேதுபதி யாருக்கு ஃபேன் என்பதை அவரே கூறி உள்ளார்.
விஜய் சேதுபதி, பெரிய திரையுடன் சின்னத்திரையையும் பல ஆண்டுகளாக கையாண்டு வருகிறார். தற்போது முதல் முறையாக பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். இவர் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் எப்படி தொகுத்து வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. ஆனால் துவக்க விழாவிலேயே எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளார்.
அனைத்து போட்டியாளர்களிடமும் மிக யதார்த்தமாக பேசி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். அதில் போட்டியாளர்களாக வந்த சத்யா, எப்படி நீங்க எப்பவும் யதார்த்தமாக இருக்கீங்க என பலரும் விஜய் சேதுபதியிடம் கேட்க நினைத்த கேள்வியை வெளிப்படையாக கேட்டு விட்டார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நடிக்கிறதுக்கு தான் காசு வாங்குறோம். நிஜ வாழ்க்கையில் எதுக்காக நடிக்கணும்? என்றார். அதோடு சேர்த்து, நான் எப்போதும் அன்பாக பேச மாட்டேன் என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார்.

அனைத்து போட்டியாளர்களையும் அவர்களை பற்றி சொல்லி வரவேற்ற விஜய் சேதுபதி, நடிகரும், விஜய் டிவி தொகுப்பாளருமான தீபக்கை வரவேற்கும் போது மட்டும், நானே இவரோ மிகப் பெரிய ஃபேன் என்றார். பொதுவாக பெரிய நடிகர்கள் அனைவரும் தன்னை விட பெரிய நடிகராக இருக்கும் ஒருவரை தான் நான் இவரின் ஃபேன் என்பார்கள். ஆனால் விஜய் சேதுபதி, சின்னத்திரை நடிகர் ஒருவருக்கு ஃபேனாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சத்யாவிடம் கோட் நல்லாருக்கு என வெளிப்படையாக பாராட்டிய விஜய் சேதுபதி, தீபக் இடம் எப்படி நீங்க என்றும் மார்கண்டேன் போல் அப்போது இருந்து இப்போது வரை அப்படியே இருக்கீங்களே என்றும் வெளிப்படையாக கேட்டுள்ளார். இது அனைவருக்கும் பிடித்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
{{comments.comment}}