சென்னை: விஜய் நடிப்பில் இன்று வெளிவந்த தி கோட் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து தற்போது வெளியாகி திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் மறைந்த நடிகர் விஜயகாந்தின் ஏஐ தொழில்நுட்பத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கு திரையரங்கில் உள்ள டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்துள்ளன. இந்த நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரை வேதனை அடையச் செய்துள்ளது. படக்குழுவினர் படம் வெளியாதவதற்கு முன்னரே இணையதளத்தில் வெளியாகாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியுள்ளனர். இந்த படம் இணையதளத்தில் வெளியானால் பெரிய அளவில் பொருட் செலவும், இப்படத்தில் நடித்தவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று கூறி தடை உத்தரவு வாங்கியிருந்தனர்.
இப்படம் சுமார் 330 கோடி பொருட் செலவில் உருவாகியுள்ளது. ஆனாலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவோர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. வழக்கம் போல தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகியுள்ளது. படத்தை, இணையதளத்தில் இருந்து அதனை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}