சென்னை: விஜய் நடிப்பில் இன்று வெளிவந்த தி கோட் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து தற்போது வெளியாகி திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் மறைந்த நடிகர் விஜயகாந்தின் ஏஐ தொழில்நுட்பத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கு திரையரங்கில் உள்ள டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்துள்ளன. இந்த நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரை வேதனை அடையச் செய்துள்ளது. படக்குழுவினர் படம் வெளியாதவதற்கு முன்னரே இணையதளத்தில் வெளியாகாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியுள்ளனர். இந்த படம் இணையதளத்தில் வெளியானால் பெரிய அளவில் பொருட் செலவும், இப்படத்தில் நடித்தவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று கூறி தடை உத்தரவு வாங்கியிருந்தனர்.
இப்படம் சுமார் 330 கோடி பொருட் செலவில் உருவாகியுள்ளது. ஆனாலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவோர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. வழக்கம் போல தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகியுள்ளது. படத்தை, இணையதளத்தில் இருந்து அதனை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}