சென்னை: 40 வருட நண்பர் விஜயகாந்த். போயிட்டார்.. இனி எங்க நல்லது கெட்டதுக்கு யாரும் இல்லை என்று நடிகர் தியாகு கதறி அழுதுள்ளார்.
விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் தியாகு. விஜயகாந்த்தின் ஆரம்ப காலம் முதல் நண்பராக இருந்தவர் தியாகு. விஜயகாந்த் மரணச் செய்தியால் அவர் மிகவும் உடைந்து போயுள்ளார்.
சன் டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, 40 வருஷமா எனக்கு நண்பர்சார். வெள்ளை உள்ளம் படைச்ச மனிதர். உள்ளத்தில் எதையும் வச்சுக்க மாட்டார். உதவின்னு வந்தவங்களை சும்மா விட மாட்டார். சாப்பாடு போட்டு சாப்பிட வச்சு அழகு பார்த்தவர். அவரால் உதவி பெற்றவங்கதான் அதிகம்.

என் கிட்ட அவ்வளவு பாசமா இருப்பார். அவர்தான் சார் எங்களுக்கு எல்லாமே.. எங்க எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்தான். இனி எங்களுக்கு யாரும் இல்லை சார். எங்களால தாங்க முடியலை சார் என்று கூறி கதறி அழுதார் தியாகு.
விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளார் தியாகு. விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றியவர். விஜயகாந்த்தின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் தியாகுவும் ஒருவர்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}