எங்க நல்லது கெட்டதுக்கு யாருமே இல்லை.. எல்லாம் போச்சு.. கண்ணீர் விட்டு அழுத நடிகர் தியாகு

Dec 28, 2023,06:56 PM IST

சென்னை: 40 வருட நண்பர் விஜயகாந்த். போயிட்டார்.. இனி எங்க நல்லது கெட்டதுக்கு யாரும் இல்லை என்று நடிகர் தியாகு கதறி அழுதுள்ளார்.


விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் தியாகு. விஜயகாந்த்தின் ஆரம்ப காலம் முதல் நண்பராக இருந்தவர் தியாகு. விஜயகாந்த் மரணச் செய்தியால் அவர் மிகவும் உடைந்து போயுள்ளார்.


சன் டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, 40 வருஷமா எனக்கு நண்பர்சார். வெள்ளை உள்ளம் படைச்ச மனிதர். உள்ளத்தில் எதையும் வச்சுக்க மாட்டார். உதவின்னு வந்தவங்களை சும்மா விட மாட்டார்.  சாப்பாடு போட்டு சாப்பிட வச்சு அழகு பார்த்தவர். அவரால் உதவி பெற்றவங்கதான் அதிகம்.




என் கிட்ட அவ்வளவு பாசமா இருப்பார். அவர்தான் சார் எங்களுக்கு எல்லாமே.. எங்க எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்தான். இனி எங்களுக்கு யாரும் இல்லை சார். எங்களால தாங்க முடியலை சார் என்று கூறி கதறி அழுதார் தியாகு.


விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளார் தியாகு. விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றியவர். விஜயகாந்த்தின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் தியாகுவும் ஒருவர்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்