சென்னை: 40 வருட நண்பர் விஜயகாந்த். போயிட்டார்.. இனி எங்க நல்லது கெட்டதுக்கு யாரும் இல்லை என்று நடிகர் தியாகு கதறி அழுதுள்ளார்.
விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் தியாகு. விஜயகாந்த்தின் ஆரம்ப காலம் முதல் நண்பராக இருந்தவர் தியாகு. விஜயகாந்த் மரணச் செய்தியால் அவர் மிகவும் உடைந்து போயுள்ளார்.
சன் டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, 40 வருஷமா எனக்கு நண்பர்சார். வெள்ளை உள்ளம் படைச்ச மனிதர். உள்ளத்தில் எதையும் வச்சுக்க மாட்டார். உதவின்னு வந்தவங்களை சும்மா விட மாட்டார். சாப்பாடு போட்டு சாப்பிட வச்சு அழகு பார்த்தவர். அவரால் உதவி பெற்றவங்கதான் அதிகம்.
என் கிட்ட அவ்வளவு பாசமா இருப்பார். அவர்தான் சார் எங்களுக்கு எல்லாமே.. எங்க எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்தான். இனி எங்களுக்கு யாரும் இல்லை சார். எங்களால தாங்க முடியலை சார் என்று கூறி கதறி அழுதார் தியாகு.
விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளார் தியாகு. விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றியவர். விஜயகாந்த்தின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் தியாகுவும் ஒருவர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}