எங்க நல்லது கெட்டதுக்கு யாருமே இல்லை.. எல்லாம் போச்சு.. கண்ணீர் விட்டு அழுத நடிகர் தியாகு

Dec 28, 2023,06:56 PM IST

சென்னை: 40 வருட நண்பர் விஜயகாந்த். போயிட்டார்.. இனி எங்க நல்லது கெட்டதுக்கு யாரும் இல்லை என்று நடிகர் தியாகு கதறி அழுதுள்ளார்.


விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் தியாகு. விஜயகாந்த்தின் ஆரம்ப காலம் முதல் நண்பராக இருந்தவர் தியாகு. விஜயகாந்த் மரணச் செய்தியால் அவர் மிகவும் உடைந்து போயுள்ளார்.


சன் டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, 40 வருஷமா எனக்கு நண்பர்சார். வெள்ளை உள்ளம் படைச்ச மனிதர். உள்ளத்தில் எதையும் வச்சுக்க மாட்டார். உதவின்னு வந்தவங்களை சும்மா விட மாட்டார்.  சாப்பாடு போட்டு சாப்பிட வச்சு அழகு பார்த்தவர். அவரால் உதவி பெற்றவங்கதான் அதிகம்.




என் கிட்ட அவ்வளவு பாசமா இருப்பார். அவர்தான் சார் எங்களுக்கு எல்லாமே.. எங்க எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்தான். இனி எங்களுக்கு யாரும் இல்லை சார். எங்களால தாங்க முடியலை சார் என்று கூறி கதறி அழுதார் தியாகு.


விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளார் தியாகு. விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றியவர். விஜயகாந்த்தின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் தியாகுவும் ஒருவர்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்