சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் அவர் ஈடுபடுவதில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் திடீரென சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் வழக்கமான பரிசோதனைக்காக வந்துள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் திடீரென அவர் செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் இதை வதந்தி என்றும் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், தேமுதிக அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}