சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் அவர் ஈடுபடுவதில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் திடீரென சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் வழக்கமான பரிசோதனைக்காக வந்துள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் திடீரென அவர் செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் இதை வதந்தி என்றும் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், தேமுதிக அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}