சென்னை: சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே விஜயகாந்த்துக்கு என்று ஒரு மாளிகை திறந்து இருக்கும் என்று இயக்குனர் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி:
ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தமிழர்களின் மனதில் ஒரு பெரும் ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிழல் கொடுத்து கனி கொடுத்து அருள் கொடுத்து அன்பு கொடுத்து இன்று இந்த மண்ணிலே சாய்ந்து விட்டீர்களே ஐயா.
நீங்கள் சாய்ந்தாடும் இந்த தமிழ் பூமி தவம் என உங்களை சுமக்கும். உங்கள் வேர்கள் எங்கள் இதயங்களில் பயணிக்கும். நீங்கள் விட்டுச் சென்ற விழுதுகள் இந்த பூமியில் மரங்களாய் வளரும். சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே உங்களுக்கு ஒரு மாளிகை திறந்து இருக்கும். ஓய்வெடுங்கள் ஐயா என்றும் சிரித்த உங்கள் கன்னங்களில் நான் முத்தமிடுகிறேன் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.
எஸ்.எஸ் பாஸ்கர்
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் நடிகர் எஸ். எஸ்.பாஸ்கர். குமுறிக் குமுறி அவர் அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது.
இயக்குநர் பாலா
என் வாழ்க்கையில நான் பார்த்த முதல் செலிபர்டி அவர் தான். உன்னதமான மனிதர். அவரை முதல் முதலில எங்க ஊருல தான் தூரத்துல இருந்து பார்த்தேன். அதுக்கப்பறம் அவரை பார்க்கனும்னு நினைச்சேன். எப்படி பார்க்கிறதுன்னு தெரியலை, ஆனாலும் அவரை பார்க்கனும் நினைச்சேன். இன்னிக்கி தான் பார்த்தேன். அவரை பத்தி பேச எனக்கு தகுதி இல்ல. அவ்வளவு பெரிய ஆளும் இல்ல, அவரு கிட்ட இருந்து நிறைய கத்துக்கிறனும். அவர் எல்லாரு மனசுலயும் இருக்காரு. எம் மனசுல நெறையா இருக்காரு என்று கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}