விக்ரம் லேண்டரை மேலே எழுப்பி மீண்டும் நிலவில் தரையிறக்கிய இஸ்ரோ

Sep 04, 2023,11:53 AM IST

பெங்களூரு: விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி அதை மீண்டும் தரையிறக்கி புதிய சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.


தான் இருந்த இடத்திலிருந்து சற்று அருகே போய் தரையிறங்கி விக்ரம் லேண்டர் தனது கெத்தைக் காட்டியுள்ளது. 




சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் விக்ரம் லேண்டர் நிலவின் தென் முனையில் இறங்கியுள்ளது. அதில் இணைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவரும் அதிலிருந்து வெளியே வந்து விட்டது. இருவரும் இணைந்து பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.


தற்போது நிலவில் இரவு தொடங்கியிருப்பதால் இருவரும் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் லேண்டரில் ஒரு குட்டி வேலையைச் செய்துள்ளது இஸ்ரோ. அதாவது லேண்டரில் உள்ள ராக்கெட்களை இயக்கி அதை 40 செமீ உயரத்திற்கு மேலெழும்ப செய்தது. பின்னர் தான் இருந்த இடத்திலிருந்து 30 முதல் 40 செமீ தொலைவில் அதை தரையிறக்கியது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகும். இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ  தெரிவித்துள்ளது.


இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவீட்டில், விக்ரம் லேண்டர் தனது நோக்கத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளது. எதிர்பார்ப்பையும் தாண்டி அது சிறப்பாக செயல்படுகிறது. ஒரு பரீட்சார்த்தை முயற்சியிலும் அது வெற்றி பெற்றுள்ளது. தனது என்ஜின்களை செயல்படுத்தி இருந்த இடத்திலிருந்து 40 செமீ உயரத்திற்கு எழும்பி பின்னர் தான் இருந்த இடத்திலிருந்து 30 முதல் 40 செமீ அருகே அது தரையிறங்கியது. 


இதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அதாவது தரையிறங்கிய விண்கலம் மாதிரிகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கிளம்பி வர முடியுமா என்பதுதான் இந்த சோதனையின் நோக்கம். எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதனை அனுப்பினால், இதேபோல தரையிறங்கிய பின்னர் மீண்டும் விண்கலம் கிளம்பி வர முடியுமா என்பதற்கான சாதனை. அந்த வகையில் இது மிகவும் முக்கியமான சோதனையாகும்.


இந்த சோதனையின்போது அனைத்துமே சிறப்பாக செயல்பட்டன. லேண்டர் மீண்டும் தரையிறங்கிய பின்னர் அனைத்தும் இயல்பான நிலையில் உள்ளன.  அதன் கருவிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்படுகின்றன. லேண்டர் ஆரோக்கியமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்