விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து பாமக முடிவு எடுக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் நடத்தை விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜூன் 14ஆம் தேதி, அதாவது நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்கி, ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப் பதிவு ஜூலை 10ம் தேதி நடைபெறும், வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கூட்டணியில் வேட்பாளர்களை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இதுவரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருந்த பாமக இந்த முறை விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பல கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அவைத் தலைவர் ஜி கே மணி மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் பேசினோம். எங்களுடைய முடிவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிய பிறகு தெரிவிக்கிறோம் என்றார்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}